ஆசியா

தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் பே ஹியூன்-ஜின் மீது கடும் தாக்குதல் : சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்

  • January 26, 2024
  • 0 Comments

தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் பே ஹியூன்-ஜின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினரான பே ஹியூன்-ஜின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் பே ஹியூன்-ஜின் தரப்பிலிருந்தும், இவரது கட்சி தரப்பிலிருந்தும் உடனடியாக பதில் எதுவும் […]

இலங்கை

பமுனுகம பிரதேசத்தில் வீதியில் மூவரிடம் கூரிய ஆயுதங்களால் தாக்கி பணம் கொள்ளை!

  • January 26, 2024
  • 0 Comments

பமுனுகம தெலத்துர அலபம்மா பகுதியில் மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களின் பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துள்ளனர். இணையத்தில் வெளியான விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வந்த மூவரே தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியில் மறைந்திருந்த நால்வர் தாக்குதலை நடத்தி 132,000 ரூபா பணம், 5 கையடக்கத் தொலைபேசிகள், நெக்லஸ் மற்றும் வளையல் என்பவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக […]

ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவில் மின்சாரம் துண்டிப்பு : பல்லாயிரக்கணக்கானோர் அவதி!

  • January 26, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில், வெப்பமண்டல சூறாவளி காரணமாக பல்லாயிரம் கணக்கானவர்கள்  மின்சாரத்தை இழந்து தவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சூறாவளியானது டவுன்ஸ்வில்லிக்கு அருகிலுள்ள கிரேட் பேரியர் ரீஃப் எல்லையில் கரையைக் கடந்தது. இருப்பினும் குறித்த சூறாவளியால் கனமழை பெய்ததுடன், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

இலங்கை முக்கிய செய்திகள்

பவதாரணியின் உடலைப்பார்க்க கொழும்பு வந்த யுவன்

  • January 26, 2024
  • 0 Comments

இலங்கையில் உயிரிழந்த பாடகி பவதாரணியின் உடலை பார்க்க அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இன்று காலை இலங்கைக்கு வருகைத் தந்தார். தற்போது பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பில் உள்ள மலர்சாலைக்கு சென்றுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி மாலை உயிரிழந்தார். இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு […]

செய்தி

தென்கொரியாவில் பொரித்த பல்குத்தும் குச்சிகளை உட்கொள்ளும் மக்களுக்கு எச்சரிக்கை

  • January 26, 2024
  • 0 Comments

தென்கொரியாவில் மாவுச்சத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொரித்த பல்குத்தும் குச்சிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த உண்ண வேண்டாம் என்று அந்நாட்டின் உணவு அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவற்றைக் காண்பதற்குப் பொரித்த உருளைக்கிழங்கைப் போல் இருக்கும். பல்குத்தும் குச்சிகளின் மீது தூளாக இருக்கும் பாலாடைக்கட்டியைத் தூவி மக்கள் உண்டு ருசிக்கும் காட்சிகளைக் காட்டும் காணொளிகள் TikTok, Instagram தளங்களில் பரவலாகப் பகிரபட்டு வருகின்றன. உணவில் சேர்க்கப்படும் வண்ணம் அவற்றில் கலந்திருப்பதால் அவை பச்சை நிறத்தில் இருக்கும். “பொரித்த […]

ஐரோப்பா

பிரான்ஸில் முக்கிய வீதிகள் முடங்கியது – டிராக்டரை நிறுத்தி மறியல்

  • January 26, 2024
  • 0 Comments

பிரான்ஸில் அரசின் கொள்கை முடிவுகளை கண்டித்து விவசாய சங்கங்கள் வாரக்கணக்கில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஜெர்மனி, போலந்து, ருமேனியா போன்ற ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து பிரான்ஸிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் குறைந்த விலைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்வதாலும், ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளாலும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், விவசாய எந்திரங்களுக்கான டீசல் மாணியத்தை ரத்து செய்ய அரசு பரிசீலித்துவருவதை கண்டித்து ரென் நகரின் முக்கிய வீதிகளின் குறுக்கே டிராக்டரை நிறுத்தி விவசாயிகள் […]

பொழுதுபோக்கு

ஆவிகள் பிசாசுகள் பற்றி மிக தீவிரமாக ஆராயும் படத்தில் பூமிகா…

  • January 26, 2024
  • 0 Comments

‘பத்ரி’ படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ரோஜாகூட்டம், சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பூமிகா சாவ்லா. பின்னர் தெலுங்கு சினிமாவில் பிசியாவிட்டார். தங்கர் பச்சான் இயக்கத்தில் இவர் நடித்த ‘களவாடிய பொழுதுகள்’ படம் பல வருடங்களுக்கு பிறகு வெளியானது. கடைசியாக கடந்த ஆண்டு வெளிவந்த ‘கண்ணை நம்பாதே’ படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இந்த நிலையில் தற்போது ‘ஸ்கூல்’ என்ற படத்தில் பள்ளி ஆசிரியையாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். படம் பற்றி […]

இலங்கை

சனத் நிஷாந்த பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் சாரதி அளித்த வாக்குமூலம்!

  • January 26, 2024
  • 0 Comments

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உயிரிழப்புக்கு மிதமிஞ்சிய வேகத்தில் சாரதி வாகனத்தை செலுத்தியதே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் சனத் நிஷாந்தவின் வாகன சாரதி பிரபாத் எரங்க கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், இராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் விபத்து குறித்து பொலிஸாரிடம் அவர் வழங்கிய வாக்குமூலத்தில், சீக்கிரம் கொழும்புக்கு வரலாம் என்று நினைத்து வந்தோம். அதற்குள் அமைச்சர் தூங்கிவிட்டார். நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் இருந்த […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு!

  • January 26, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஜூன் 2023 வரையிலான 12 மாத காலப்பகுதியில், ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 624,100 ஆக அதிகரித்துள்ளது, இது 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 10 ஆண்டு சராசரியை விட 1.4 சதவீதம் அதிகம். அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் பணியகம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் சமூகத்தின் அதிகரிப்பு மக்கள்தொகை வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. கட்டுப்படியாகாத வீட்டு வாடகை நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு […]

இலங்கை

வவுனியவாவில் குடும்பத்தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குழுவினர்!

  • January 26, 2024
  • 0 Comments

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுளைந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அடித்து சேதப்படுத்தியதுடன் குடும்பத்தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டில் கணவன் தொழில் நிமித்தம் வெளியே சென்ற சமயத்தில் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் தனிமையில் இருந்துள்ளனர். இதன் போது வீட்டிற்குள் உள்நுளைந்த 5 பேர் கொண்ட இனம்தெரியாத குழு ஒன்று அவரது கணவனான சிவசுதன் தொடர்பாக கடும் தொனியில் விசாரித்ததுடன் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். […]

error: Content is protected !!