ஐரோப்பா

ஒலிம்பிக் தடைகளுக்கு எதிரான ரஷ்ய மேல்முறையீடு விரைவில் விசாரணை

தேசிய ஒலிம்பிக் கமிட்டி (என்ஓசி) நிதியுதவி பெறுவதையும் ஒலிம்பிக் இயக்கத்துடன் தொடர்புடையதாக இருப்பதையும் தடுக்கும் பொருளாதாரத் தடைகளுக்கு எதிரான ரஷ்ய மேல்முறையீட்டை உலகளாவிய விளையாட்டின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளான உக்ரைனின் பிராந்தியங்களை லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியா ஆகிய ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளான உக்ரைனின் பிராந்தியகளை அங்கீகரித்ததற்காக. ஒலிம்பிக் கவுன்சில் ரஷ்யாவுடன் இணைத்ததன் பின்னர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அக்டோபர் மாதம் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியை (ROC) […]

ஆஸ்திரேலியா

பெண்களின் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த ஆண் ; சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்

  • January 26, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணியும் நீச்சல் உடையை அணிந்து ஆண் ஒருவர் விளம்பரம் மொ டலாக நடித்ததால் சம்பந்தப்பட்ட நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் உடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று வழக்கமான பெண்களை வைத்து மாடலாக பயன்படுத்தி விளம்பர வீடியோவை வெளியிடும்.எனினும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் அணியும் நீச்சல் உடையை ஒரு ஆண் விளம்பர மொடலுக்கு அணிவித்து விளம்பரப்படுத்தியது. இந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் இந்த விளம்பரத்திற்கு பலர் கடும் […]

இலங்கை

இலங்கை : நாடாளுமன்றம் அமர்வு தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பாராளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளதுடன், அரசியலமைப்பின் 70 வது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனைக் கடித்துக் குதறிய தெருநாய்!

  • January 26, 2024
  • 0 Comments

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனைக் கடித்துக் குதறிய போது, அதை தடுக்க வந்த முதியவரை அந்த நாய் கடித்த சம்பவம் ஹாசன் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாவட்டம், ஹாசன் மாவட்டம், பேலூர் நகரின் தாவூத் சாப் தெருவைச் சேர்ந்தவர் அக்ரம்பாஷா. இவரது வீட்டிற்கு கெண்டேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அவரது மகன் முகமது குடும்பத்தினருடன் வந்திருந்தார். வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முகமதுவின் 3வயது மகன் முகம்மது ஹமாஜ் […]

ஆசியா

இஸ்ரேல் இராணுவத்தின் மீது சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று

காசாவில் இஸ்ரேல் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்ஆபிரிக்கா தாக்கல் செய்துள்ள மனு மீதான தனது தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. காசாவில் போர் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு சமம் என்ற தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக்காக இஸ்ரேலிய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். 25,700 பேரைக் கொன்ற அழிவுகரமான தாக்குதல், அரசு தலைமையிலான இனப்படுகொலைக்கு சமம் என்றும், ஐ.நா.வின் இனப்படுகொலை மாநாட்டை மீறுவதாகவும், 1948 இல் கையொப்பமிடப்பட்ட உலகின் பதிலடியாக இஸ்ரேலுக்கு எதிராக […]

ஐரோப்பா

ரஷ்ய இராணுவப் பயிற்சி முகாம்களில் மலேசிய கூலிப்படையினர்: உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய இராணுவப் பயிற்சி முகாம்களில் “மலேசியாவிலிருந்து வந்த கூலிப்படையினரை பார்த்ததாக உக்ரைனின் தேசிய எதிர்ப்பு மையம், தெரிவித்துள்ளது. உக்ரேனுக்கு எதிராக ரஷ்யர்களுடன் இணைந்து போராடும் எவரும் “இராணுவ இலக்கு” என்று எச்சரித்துள்ளது. மலேசிய பிரஜைகள் இருப்பதாகக் கூறப்படும் கூடுதல் தகவலுக்கான கோரிக்கைகளுக்கு மலேசியா பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது இசைக் குயிலின் உடல்

  • January 26, 2024
  • 0 Comments

மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் இன்று (26) பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து  ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தினூடாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இசைஞானி இளையராஜாவின் மகளும், மறைந்த பின்னணி பாடகியுமான பவதாரணியின் பூதவுடலை பார்ப்பதற்காக அவரின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தமிழ் திரைப் பிரபலங்கள் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.  

இலங்கை

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் விபத்து : இளைஞர் பலி!

  • January 26, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக லொறியும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விபத்தில் லொறியில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, உழவு இயந்திரத்தின் சாரதியும் கைது […]

இலங்கை

இலங்கை : கெரவலப்பிட்டிக்கு உட்பட் நெடுஞ்சாலையில் விபத்து : 03 பலி!

  • January 26, 2024
  • 0 Comments

நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை தகவல் மையம் தெரிவித்துள்ளது. கடவட மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

ஐரோப்பா

30 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு பிரான்சில் கல்வி கற்க வாய்ப்பு!

  • January 26, 2024
  • 0 Comments

30000 இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பிரான் ஜனாதிபதி மக்ரோன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார். இந்தியாவின் 75 வது குடியரசு தின விழாவிற்கு முன்னதாக, 30 ஆயிரம் இந்திய மாணவர்களை அங்கு படிக்க அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் X பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 2030-ல் பிரான்சில் 30,000 இந்திய மாணவர்கள். இது மிகவும் லட்சிய இலக்கு, ஆனால் அதைச் சாதிக்க நான் உறுதியாக […]

error: Content is protected !!