இந்தியா

15 மாதக் குழந்தையை நீரில் தூக்கிவீசிக் கொலை செய்த கொடூர தாய் – கைது செய்த பொலிஸார்!

  • December 21, 2023
  • 0 Comments

கர்நாடகா மாநிலம், ராமநகர் மாவட்டத்தில் 15 மாத ஆண் குழந்தையை நீரில் தூக்கிவீசி கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம், ராமநகர் மாவட்டம், பனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம்மா (21). இவர் இன்று காலை துணி துவைக்க செல்வதாக கூறி அருகில் உள்ள கனவா நீர்த்தேக்கத்துக்கு தனது 15 மாத ஆண் குழந்தை தேவராஜூடன் சென்றார். இந்நிலையில், மாலையில், குழந்தை தேவராஜ், நீரில் தவறி விழுந்து விட்டதாக பாக்கியம்மா அழுது கொண்டே வீட்டுக்கு […]

இலங்கை

யாழில் விசேட அதிரடிப் படையினரின் திடீர் சுற்றிவளைப்பு – 4 வாள்களுடன் சிக்கிய நபர்

  • December 21, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று (21) தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது வீட்டில் இருந்து நான்கு வாள்களும் சட்டவிரோதமான சிகரெட் பெட்டிகளுகளும் மீட்கப்பட்டது. உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 38 வயதான சந்தேக நபரொருவரும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் மேலதிக […]

இந்தியா

உத்திரபிரதேசத்தில் ரூ.200 கடனுக்காக மாணவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல்!

  • December 21, 2023
  • 0 Comments

உத்தரபிரதேசத்தில் ரூ.200 கடனை திருப்பித் தர இயலாத மாணவரை அரை நிர்வாணமாக்கி தாக்கி வீடியோ வெளியிட்ட அவரது நண்பர் மற்றும் சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் தன்னுடன் படிக்கும் நண்பனிடம் ரூ.200 கடன் பெற்றுள்ளார். கடந்த திங்கள்கிழமை, அங்குள்ள ஒரு பூங்காவில் அந்த மாணவரும், அவரது நண்பரும் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்ப்பு

  • December 21, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு வட்டி வீதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டில் மந்தநிலை அதிகரித்து வரும் அபாயத்திற்கு மத்தியில் Bank of England வட்டி விகிதக் குறைப்புகளைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நிதிச் சந்தைகள் தெரிவித்துள்ளது. பொருளாதாரம் விரைவாக மோசமடைந்து வரும் நிலைமைக்கு மத்தியில் வங்கியின் மூலோபாயம் அடுத்த ஆண்டு கைவிடப்படும் அபாயம் அதிகரித்து வருவதாக நகர முதலீட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அடிப்படை […]

இலங்கை

யாழில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் : 07 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு , குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில், இரண்டு தரப்பினருக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடு முற்றிய நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த முதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் நால்வரும் மற்றைய தரப்பில் மூவருமாக 07 பேர் […]

இலங்கை

வடமாகாணத்தில் அதிபர்களுக்கான பாடசாலைகள் பிரதேச ரீதியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

  • December 21, 2023
  • 0 Comments

அண்மையில் தேசிய ரீதியாக வழங்கப்பட்ட அதிபர் தரம் மூன்றிற்கான நியமனத்தின் பின்னர் வடமாகணத்தில் சரியான முறையில் அதிபர்களுக்கான பாடசாலைகள் பிரதேச ரீதியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று (21.12) இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டது. தேசிய ரீதியில் 174 வெட்டுப் புள்ளிகளைப் பெற்று ஆதிபர் பரீட்சை போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் தூரப்பிரதேசங்களுக்கு சேவைக்காக அனுப்பப்படும் அதேவேளை அதிக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் மைலேஜ்.. அசத்தலான பேட்டரியுடன் எலக்ட்ரிக் கார்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கி.மீ.க்கு மேல் வாகனத்தை இயக்கும் திறன் கொண்ட புதிய பேட்டரியை சீனாவில் உள்ள எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் நிரூபித்துள்ளது. ஷாங்காயை தளமாகக் கொண்ட நியோ, அடுத்த தலைமுறை பேட்டரி ஏப்ரல் 2024 இல் வெகுஜன உற்பத்தியில் நுழையும் என்று கூறுகிறது, இது தற்போது சந்தையில் உள்ள மற்ற மின்சார அல்லது எரிபொருளில் இயங்கும் காரை விட நீண்ட வரம்பை வழங்குகிறது. நியோ தலைமை நிர்வாகி வில்லியம் லி 14 மணி […]

இலங்கை

யாழில் வாட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை – இருவர் கைது!

  • December 21, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களில் இருவரை பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் போதே சந்தேகநபர்கள் வாட்ஸ் செயலி ஊடாக மாணவர்களுடன் தொடர்புகளை பேணி , போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது அந்நிலையில் சந்தேகநபர்களின் தொலைபேசிகளை […]

உலகம்

8,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையில் : மனித உரிமைகள் குழுக்கள்

ஹமாஸின் தாக்குதல்களுக்குப் பிறகு 8,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீன அரசியல் கைதிகளை ஆதரிக்கும் மனித உரிமைக் குழுவான அடமீர், கைதிகளில் 123 பெண்கள் உட்பட காஸாவிலிருந்து நூற்றுக்கணக்கானோர் அடங்குவர் என தெரிவித்துள்ளது. இருப்பினும் பிரதேசத்தில் இருந்து உண்மையான மொத்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.எனவும் தெரிவித்துள்ளனர்.

வட அமெரிக்கா

கனடாவில் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இந்தியக்கு நேர்ந்த கதி!

  • December 21, 2023
  • 0 Comments

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடுகளில், சர்வதேச மாணவர்கள் பலர் தங்கியுள்ளார்கள். அவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர்.கடந்த செவ்வாயன்று அதிகாலை 7.35 மணிக்கு அவசர உதவிக்குழுவினர் அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். எரிவாயுக் கசிவு என்று நினைத்து அவசர உதவிக்குழுவினர் அங்கு விரைந்த நிலையில், அங்கு கார்பன் மோனாக்சைடு வாயுவால் அந்த வீட்டில் வசித்துவந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.ஆனால், அவர்களில் 25 வயதான இந்திய இளைஞர் ஒருவர் […]

error: Content is protected !!