இந்தியா

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை! – துணை முதல்வர் சிவக்குமார்

  • October 30, 2023
  • 0 Comments

காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீண்டும் பிடிவாதம் காட்டியுள்ளார். காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கூறும்போது, கர்நாடகாவில் தற்போது மழை […]

இலங்கை

இரண்டு இலங்கை விமானங்கள் இந்தியாவில் அவசரமாக தரையிறக்கம்

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 365 விமானமும், மாலைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 116 விமானமும் இந்தியாவில் தரையிறங்கியுள்ளன. மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களில் […]

இலங்கை

கொள்ளுப்பிட்டியில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து !

கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதல வீதிக்கு அருகில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. டுப்பிளிகேஷன் வீதியில் வர்த்தக அமைச்சுக்கு முன்னால் இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மரம் முறிந்து வீழ்ந்ததில் காரின் பின்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.        

பொழுதுபோக்கு

குளியல் காட்சி… 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!

  • October 30, 2023
  • 0 Comments

குளியல் காட்சியில் நடிக்க வேண்டுமென்றால் 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கொடுங்கள் என்று நடிகை நிலா கேட்டுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு திரையுலகில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிலா. மீரா சோப்ரா என்ற இயற்பெயரை கொண்ட இவர் பிரபல பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ராவின் உறவினர். இவர், ’மருதமலை’, ‘ஜாம்பவான்’, ‘லீ’ உள்ளிட்டப் படங்களில் நடித்தார். இந்த சூழலில் ’ஜாம்பவான்’ […]

இலங்கை

சொத்து வரி விதிக்கப்படுவது முன்னேற்றகரமானது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

  • October 30, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் விதிக்கப்படவுள்ள செல்வ வரி அல்லது சொத்து வரி மிகவும் முன்னேற்றகரமான வரி என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், செல்வப் பரிமாற்றம் என்பது சாமானிய மக்களைப் பாதிக்காத வரி என்றும், முழுமையான ஆய்வுக்குப் பிறகு அமல்படுத்தப்படும் என்றும்  கூறினார். மேலும் சொத்துவரி விதிப்பால் உள்ளாட்சி அமைப்புகள் வலுப்பெறுவதோடு, சாமானிய மக்களுக்கும் பல […]

இலங்கை

இலங்கையின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் காப்புறுதி திட்டம்!

  • October 30, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரூபா நன்மையுடன் காப்புறுதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டு முதல் இந்த காப்பீட்டுத் திட்டம் செயல்படும். கடந்த மே மாதம் அமைச்சரவை இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. அதற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 60 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை புயல் ஒன்று தாக்கவிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. Storm Ciarán என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல், புதன்கிழமை துவங்கி வியாழன் வரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும், பிரான்சின் மேற்குக்கரையில் மணிக்கு 80 மைலுக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசலாம் என்றும், இந்த வாரம் முழுவதுமே காற்று வீசியவண்ணமே இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

பிரபல இளம் நடிகை தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்

  • October 30, 2023
  • 0 Comments

மலையாளத்தில் சீரியல், திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஞ்சுஷா மேனன். சீரியல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்த ரெஞ்சுஷா மேனன், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 35 வயதே ஆன இளம் நடிகையான ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மலையாள திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சீரியல் மூலம் பிரபலமான அவருக்கு சினிமாவிலும் சின்ன கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சீரியல், சினிமா என இரண்டு பக்கங்களிலும் அதிகமான ஆஃபர்கள் கிடைத்ததால், எப்போதுமே பிஸியாகவே வலம் வந்துள்ளார். […]

இலங்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  • October 30, 2023
  • 0 Comments

அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு சாதகமான பதிலை ஜனாதிபதி அறிவித்துள்ளார். எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று (30.100 பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

மத்திய கிழக்கு

‘நான் தவறு செய்து விட்டேன்’- மன்னிப்புக் கேட்ட பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

  • October 30, 2023
  • 0 Comments

ஹமாஸ் தாக்குதல் குறித்து, இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவு அமைப்பு முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்று கூறியதற்கு, கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தன் கருத்துக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கேட்டார். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது, கடந்த 7ம் திகதி, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்கும் இடையேயான மோதலில், பாலஸ்தீனம் தரப்பில் 8,000 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதாரத்துறை […]