அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பாலஸ்தீனியர்கள் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான ஹெப்ரோனுக்கு அருகிலுள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 17 மற்றும் 31 வயதுடைய இருவரும் ஹெப்ரோனின் தெற்கே உள்ள ஃபவ்வார் அகதிகள் முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஃபவ்வார் நகரில் “பயங்கரவாத எதிர்ப்பு” நடவடிக்கையை மேற்கொண்டதாக ராணுவம் கூறியது. இந்த நடவடிக்கையின் போது “தாக்குதல்காரர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது பாறைகள், மொலோடோவ் காக்டெய்ல் மற்றும் பட்டாசுகளை வீசினர்” […]













