பணக்கார நாடுகள் மனிதாபிமான உதவிகளில் ‘நியாயமான பங்கை’ செலுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்
மனிதாபிமான நிதியுதவிக்கான பொறுப்பு உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களுக்கிடையில் “சமமாகப் பகிரப்படவில்லை” என்று ஐரோப்பிய ஒன்றிய மனிதாபிமான உதவி ஆணையர் ஜேன்ஸ் லெனார்சிக் தெரிவித்த்துள்ளார். “ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வளர்ந்த நாடுகளில் உள்ள அனைவரும் மனிதாபிமான உதவிக்காக நிதி ஒதுக்கீடு செய்தால், நிதி இடைவெளி இருக்காது, என்று லெனார்சிக் கூறியுள்ளார். ஆனால் பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் முக்கிய உலகப் பொருளாதாரங்கள் உத்தியோகபூர்வ வளர்ச்சி உதவிக்கான 0.7% இலக்கை விட குறைவாக இருப்பதாக தரவு தெரிவிக்கிறது. […]













