தாய்லாந்து-அதிவேகத்தில் மரத்தில் மோதி இரண்டாக பிளந்த பேருந்து…14 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்!
தாய்லாந்து நாட்டில் மரத்தின் மீது மோதி பேருந்து விபத்திற்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று தாய்லாந்து. உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் தாய்லாந்தில் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. சாலை விபத்துகளைத் தவிர்க்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை. இந்நிலையில் பேருந்து ஒன்று, மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 14 பேர் […]













