இலங்கை செய்தி

இலங்கையில் இருபத்தி மூன்று லட்சம் வாகனங்களை தடை செய்ய நடவடிக்கை

  • December 16, 2023
  • 0 Comments

தற்போது பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத இருபத்தி மூன்று இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத வாகனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது எண்பத்து மூன்று இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், வருடாந்தம் ஐம்பத்தைந்து இலட்சம் வாகனங்கள் மட்டுமே புதுப்பிக்கப்படுவதாகவும், வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்குத் தேவையான புகைப் பத்திரங்களைப் பெறுவதன் […]

இலங்கை செய்தி

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – மஹிந்த

  • December 16, 2023
  • 0 Comments

தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு அடுத்த வருடம் தனது அரசியல் எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார. கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாடு நேற்று பிற்பகல் நடைபெற்றது. அங்கு முன்னாள் ஜனாதிபதியின் பெயர் கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்வு

  • December 16, 2023
  • 0 Comments

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகமாக காணப்படும் சூழலில், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் அறுவடை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த பருவ மழையால் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விளைச்சலும் வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கரில் சராசரியாக 5,000 கிலோ வெங்காய மகசூல் கிடைக்கும் என்றாலும், இம்முறை ஒரு ஏக்கரில் இருந்து 1,000 கிலோ மட்டுமே கிடைத்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். எவ்வாறாயினும், இம்மாத இறுதி […]

விளையாட்டு

சமூக வலைதளத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ்

  • December 16, 2023
  • 0 Comments

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை அணி இழந்துள்ளது. மும்பை அணியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என குமுறும் […]

ஆசியா செய்தி

குவைத் நாட்டின் புதிய அமீராக ஷேக் மெஷால் நியமனம்

  • December 16, 2023
  • 0 Comments

86 வயதில் இறந்த ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபாவின் வாரிசு இளவரசர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-சபா குவைத்தின் அமீராக பெயரிடப்பட்டார், அரச நீதிமன்றத்தின்படி. அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை, ஆனால் அவசர உடல்நலப் பிரச்சினை காரணமாக அமீர் கடந்த மாத இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செய்தி நிறுவனமான அறிக்கையின்படி, துணைப் பிரதமரும், அமைச்சரவை விவகாரங்களுக்கான இணை அமைச்சருமான இசா அல்-கந்தாரி இந்த வாரிசை அறிவித்தார். பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-சபா, 83, […]

இலங்கை செய்தி

இறையாண்மையைப் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புப் படைகளுடையது – ஜனாதிபதி

  • December 16, 2023
  • 0 Comments

இந்த நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படைக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் இறைமையையும் இலங்கையின் அடையாளத்தையும் பாதுகாக்கும் பணியும் பாதுகாப்புப் படையினருக்கு உண்டு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தியத்தலாவ ஸ்ரீலங்கா இராணுவ அகாடமியில் இடம்பெற்ற கெடட் அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இனவாதம் மற்றும் மத […]

ஆசியா செய்தி

முதல் முறையாக பாகிஸ்தானில் பெய்த செயற்கை மழை

  • December 16, 2023
  • 0 Comments

லாகூர் மெகாசிட்டியில் அபாயகரமான அளவு புகை மூட்டத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில் பாகிஸ்தானில் இன்று முதல் முறையாக செயற்கை மழை பயன்படுத்தப்பட்டது என்று மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாட்டில் இதுபோன்ற முதல் சோதனையில், கிளவுட் சீட்டிங் கருவிகள் பொருத்தப்பட்ட விமானங்கள் நகரின் 10 பகுதிகளுக்கு மேல் பறந்தன, “ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து குழுக்கள், இரண்டு விமானங்களுடன், சுமார் 10 முதல் 12 நாட்களுக்கு முன்பு இங்கு வந்தன. அவர்கள் மழையை உருவாக்க 48 எரிப்புகளைப் […]

இந்தியா செய்தி

குவைத் ஆட்சியாளரின் மறைவிற்கு ஒரு நாள் அரசு துக்கத்தை அறிவித்த இந்தியா

  • December 16, 2023
  • 0 Comments

குவைத் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவைத் தொடர்ந்து நாளை ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் அமீர் தனது 86வது வயதில் காலமானார். டிசம்பர் 17ஆம் தேதி மாநில துக்கத்தின் போது தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. “குவைத் மாநிலத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானார். மறைந்த உயரதிகாரிகளுக்கு […]

உலகம்

இஸ்ரேலுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கும் ஜெர்மன்

ஜெர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா ஜனவரி 8 ஆம் திகதி முதல் டெல் அவிவுக்கு விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் ஆரம்பத்தில் பிராங்பேர்ட்டில் இருந்து நான்கு வாராந்திர விமானங்களையும், முனிச்சிலிருந்து மூன்று வாராந்திர விமானங்களையும் வழங்கும் என வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் எட்டு வாராந்திர இணைப்புகளையும் சுவிஸ் ஐந்து வாராந்திர விமானங்களையும் திட்டமிடுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 8 முதல் ஐந்து வாராந்திர விமானங்களுடன் […]

இலங்கை செய்தி

முல்லைதீவில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 32 குடும்பங்கள் பாதுகாப்பாக மீட்பு

  • December 16, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாட்ட மக்கள் அழிவுகளை எதிர்நோக்கியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது. அந்தவகையில் இன்றையதினம் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி கிராமத்தில் உள்ள 32 குடும்பங்களை சேர்ந்த 102 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டு கருவேலன்கண்டல் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச […]