பொழுதுபோக்கு

ஓடிடியில் வெளியானது ஹன்சிகாவின் மை3 வெப் தொடர்

  • September 15, 2023
  • 0 Comments

சாந்தனு, ஹன்சிகா மற்றும் முகேன் ராவ் நடித்துள்ள மை3 வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் எம்.ராஜேஷ். கடந்த 2019-ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2021-ல் அவர் இயக்கிய ‘வணக்கம்டா மாப்பிள்ளை’ படமும் ரசிகர்களிடம் சேரவில்லை. இதையடுத்து, அவர் வெப் தொடர் […]

உலகம்

கனடா அனுப்புவதாக பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்

  • September 15, 2023
  • 0 Comments

கனடா அனுப்புவதாக பணமோசடியில் ஈடுபட்ட காத்தான் குடியைச்சேர்ந்த சந்தேகநபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சில மாதங்களிற்கு முன்னர் பளை பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் சமுக வலைத்தளம் ஊடாக வந்த விளம்பரம் ஒன்றில் அறிமுகமாகி கனடா செல்வதற்காக பத்து லட்சம் வைப்பிலிட்டுள்ளார். அதன் பின் நீண்ட நாட்கள் ஏமாற்றி வந்ததால் கெடிகாமம் பொலிஸ் ஊடாக யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவில் முறைப்பாடு மேற்கொண்டார். விசாரணைகளை மேற்கொண்ட யாழ். மாவட்ட விசேட குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழுவினர் காத்தான் […]

ஐரோப்பா

வாக்னர் கூலிப்படையை உத்தியோகப்பூர்வமாக தடை செய்தது பிரித்தானியா!

  • September 15, 2023
  • 0 Comments

ரஷ்ய கூலிப்படையான வாக்னர் குழுவை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியா இன்று அதிகாரப்பூர்வமாக தடை செய்தது. பிரித்தானியா வெள்ளியன்று ரஷ்ய கூலிப்படையான வாக்னர் குழுவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக தடை செய்தது, கடந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவித்த பிறகு, இது உறுப்பினராக இருப்பது அல்லது அதை ஆதரிப்பது சட்டவிரோதமானது.எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் மேற்கு ரஷ்யாவில் விமான விபத்தில் அதன் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த பிறகு, வாக்னர் கூலிப்படையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே கருதப்பட்டது. […]

இலங்கை

யாழ். வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 இன்று ஆரம்பம்!

  • September 15, 2023
  • 0 Comments

யாழ். வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 எனும் தொனிப் பொருளிலான மூன்று நாள் கண்காட்சி யாழில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று காலை ஆரம்பித்து வகைக்கப்பட்ட இக்கண்காட்சியானது நாளையும் நாளை மறுதினமுமாக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியை இலங்கை கட்டிட நிர்மாண கழகத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி பொறியியளாளர் நிஷ்ங்க விஜேரத்தன விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். இந் நிகழ்வில் மூத்த தலைவர்கள், அமைச்சர் […]

இலங்கை

சர்வதேச விசாரணை மைத்திரிபாலவுக்கா? ISIS தீவிரவாதிகளுக்கா? – ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி

  • September 15, 2023
  • 0 Comments

ஈஸ்ரர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கா அல்லது ISIS தீவிரவாதிகளுக்கா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (15) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறுகையில், தென்னிலங்கை பெரும்பான்மையின தலைவர்கள் சர்வதேச விசாரணையை கோருவது என்பது தேர்தலுக்கான யுத்தியே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரங்களையோ அல்லது […]

இலங்கை

புத்த விகாரைகள் அமைக்கப்படும் இடங்களில் மனித எச்சங்கள்: ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்

  • September 15, 2023
  • 0 Comments

கடந்த யுத்த காலங்களில் அரச படையினருடன் குழுக்களாக இணைந்து செயற்பட்டவர்களுக்கு சில சமயங்களில் புத்த விகாரைகள் அமைக்கப்படும் இடங்களில் மனித எச்சங்கள் இருப்பது தெரிந்திருக்கக் வாய்ப்பிருக்கக் கூடும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ”செல்வம் அடைக்கலநாதன் மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோயில் அமைக்கப்படுகின்றன என கூறுவது அவரது அரசியல் கபடத்தனமாகவே பார்க்கப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஊடக […]

உலகம்

ஆதரவற்ற சிறார்கள் தான் இலக்கு… இளைஞர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்சியடைந்த பொலிஸார்!

  • September 15, 2023
  • 0 Comments

ஜிம்பாவே நாட்டில் ஆதரவற்ற சாலையில் திரியும் சிறார்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்டதாக இளைஞர் ஒருவர் அளித்த வாக்குமூலம் மொத்த நாட்டு மக்களையும் நடுங்க வைத்துள்ளது. ஜிம்பாவேவின் ஹராரே பகுதியை சேர்ந்த 20 வயதான அந்த இளைஞன் மீது இதுபோன்ற 8 வழக்குகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தெருவோரம் தூக்கத்தில் இருக்கும் சிறார்களை கொடூரமாக தாக்கி கொன்று விட்டு, அவர்களின் உடல் பாகங்களை சாப்பிட்டதாக பொலிஸாரிடம் ஒப்புக்கொண்ட அந்த இளைஞன், பின்னர் தாம் அப்படி கூற கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளான். கொடூர […]

இலங்கை

SLMC-ன் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகையை கண்டித்து சாந்தமருதில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

  • September 15, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை 2023.09.16 சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்து இன்று சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு இடம்பெற்றது. சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்றதுடன் நாளை (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23வது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு […]

இந்தியா

இந்தியாவில் லிஃப்ட் சென்ற 4 தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி

  • September 15, 2023
  • 0 Comments

இந்தியாவின் – உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள அம்ராபாலி குடியிருப்பு வளாகத்தில் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் இறந்தனர். இன்று காலை இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை மின்தூக்கியில் எடுத்து செல்ல முற்பட்ட போதே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது. 4 தொழிலாளர்கள் உயிரிழந்துடன் பலர் படுகாயமடைந்தனர். தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக தீயணைப்பு படையினர் வைத்தியசாலையில் அனுமதித்தனர். சம்பவம் நடந்த போது மின்தூக்கியில் 12 பேர் இருந்ததாக […]

இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

  • September 15, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அவர் கல்வி கற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இன்று மதியம் 12:30 மணயிளவில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கபட்டது இதன்பொழுது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக தியாகதீபத்தின் தியாக வரலாற்று பேருரை முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடர் மாணவர்களால் ஏற்றப்பட்டது. இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் , பல்கலைக்கழக மாணவர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.-     அத்துடன் தியாக […]

error: Content is protected !!