இலங்கை செய்தி

மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து!! பலர் வைத்தியசாலையில் அனுமதி

  • September 15, 2023
  • 0 Comments

பேருந்து ஒன்று மற்றுமொரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நாரம்மலவில் இருந்து ஹோமாகம நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தின் பின்னால் மற்றுமொரு பேரூந்து வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹோமாகம பிடிபன நானோ தொழில்நுட்ப நிறுவகத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக நாரம்மல மயூரபாத மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆறு […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவின் மூன்று சூப்பர் கார் நிறுவனங்களில் ஊழியர் வேலைநிறுத்தம்

  • September 15, 2023
  • 0 Comments

மூன்று பெரிய அமெரிக்க கார் நிறுவனங்களில் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய ஆட்டோ தொழிலாளர் சங்கம் (UAW) தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ் (GM), Ford மற்றும் Stellantis நிறுவனங்களுக்குச் சொந்தமான பல்வேறு தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வியாழன் இரவு தொழிலாளர் ஒப்பந்தங்கள் காலாவதியான பிறகு ஆலையில் உள்ள தொழிலாளர்கள் தொழில்துறை நடவடிக்கை எடுத்தனர், மேலும் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு திருப்திகரமான சலுகைகளை வழங்கவில்லை என்று ஐக்கிய ஆட்டோ தொழிலாளர் […]

இலங்கை செய்தி

மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு

  • September 15, 2023
  • 0 Comments

மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகளில் சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நீர்த்தேகத்த்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இன்று (15) காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் 27 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழிவதற்கு இன்னும் 15 அடிகள் உள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான […]

உலகம் செய்தி

வாட்ஸ்அப் பயனர்களுக்கு மற்றொரு சிறந்த அனுபவம்

  • September 15, 2023
  • 0 Comments

புதிய வாட்ஸ்அப் அப்டேட் குறித்து மெட்டா உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டார். அதன்படி, வாட்ஸ்அப் சமூக ஊடக அப்ளிகேஷன் மூலம் சேனல் வசதி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான புதிய சேனல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு

வதந்தி பரப்புபவர்களுக்கு தனது துணிச்சலான பேச்சால் பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி!

  • September 15, 2023
  • 0 Comments

விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் நடிகர். அவரது அடுத்த படமான ‘ரத்தம்’ அக்டோபர் 6 ஆம் திகதி பிரமாண்டமாக வெளிவரத் தயாராகி வரும் நிலையில், அவர் சமீபத்தில் தனது ரசிகர்களுக்காக செப்டம்பர் 9 ஆம் திகதி சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதற்கிடையில், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது குழுவினர் செப்டம்பர் 10 ஆம் திகதி சென்னை ஈசிஆரில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சி […]

இலங்கை செய்தி

ஜோர்தானில் பணிபுரியும் இலங்கை பெண்களுக்கான புதிய காப்பீடு

  • September 15, 2023
  • 0 Comments

ஜோர்தானில் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய காப்புறுதிக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பெண் தொழிலாளியை சம்பந்தப்பட்ட வேலைக்கு அமர்த்தும் முதலாளி இந்த காப்பீட்டை பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்ய பெண் இந்த காப்பீட்டு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஜோர்தானில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் இந்தக் காப்பீட்டைப் பெறுவது கட்டாயமாகும், அதற்காக ஜோர்தான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று காப்பீட்டுத் திட்டங்களில் தகுந்த […]

இலங்கை செய்தி

நாட்டை விட்டு வெளியேறிய 600 மருத்துவர்கள் நாடு திரும்புகின்றனர்

  • September 15, 2023
  • 0 Comments

சுகாதாரத்துறையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையால் மருத்துவப் பயிற்சிக்காக வெளிநாட்டில் இருக்கும் வைத்தியர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போதுள்ள திட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது மருத்துவ சேவையில் பயிற்சி பெற்று வெளிநாடுகளில் உள்ள 600 வைத்தியர்கள் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் இலங்கைக்கு திரும்புவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதன்படி […]

உலகம்

சூடானில் தொடரும் பதற்றம்: முழுபோர் வெடிக்கும் அபாயம்- வோல்கர் பெர்தஸ் எச்சரிக்கை

  • September 15, 2023
  • 0 Comments

சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே நடந்து வரும் மோதல் முழு போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக சூடானுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் வோல்கர் பெர்தஸ் (அப்பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளார்) எச்சரித்துள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக, கடந்த ஏப்ரல் 15-ஆம் திகதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை […]

இலங்கை

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய நபர்! பொலிஸார் விசாரணை

  • September 15, 2023
  • 0 Comments

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு, குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும் , அவர் பொலிஸ் நிலையம் செல்லாததால், நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த நபரை கைது செய்வதற்கு , பருத்தித்துறை பொலிஸார், அச்சுவேலி […]

இலங்கை

மலையக மக்களுக்கு ஏற்றால் போல் குடியேற்றத்தை அமைக்காவிட்டால் மலையக சமூகம் பேரழிவையே சந்திக்கும்: அருட்தந்தை மா.சத்திவேல்.

  • September 15, 2023
  • 0 Comments

மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் குடியேற்றத்தை ஏற்படுத்த பலமான திட்டத்தை வகுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் அடையாளம் மட்டுமல்ல மலையக சமூகமே பேரழிவையே சந்திக்கும் என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (15.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”மலையக மக்கள் இலங்கை மண்ணில் 200 வருட வரலாற்று வாழ்வின் நிறைவை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஊடாக […]

error: Content is protected !!