ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் அரசு பாடசாலையில் அபாயா அணியத் தடை

  • August 28, 2023
  • 0 Comments

அரசு நடத்தும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா அணிவதை பிரான்ஸ் தடை செய்யும் என்று கல்வி அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். 19 ஆம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்திய பிரான்ஸ், வளர்ந்து வரும் முஸ்லிம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை புதுப்பிக்க போராடியது. 2004 ஆம் ஆண்டில், பாடசாலைகளில் அபாயா அணிவதைத் தடைசெய்தது […]

இலங்கை செய்தி

தமிழர்களின் பூர்வீகத் தண்ணிமுறிப்பு கிராமம் மீள் குடியேற்றப்படும்வரை போராடுவோம் – ரவிகரன்

  • August 28, 2023
  • 0 Comments

தமிழர்களின் பூர்வீகக் கிராமமான தண்ணிமுறிப்பில், எமது தமிழ் மக்கள் மீளக் குடியமர்த்தும்வரை நாம் தொடர்ந்து மக்களோடு இணைந்து போராடுவோமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புபகுதியில், தொல்லியல் மற்றும், வனவளத் திணைக்களத்தால் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்கு அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், காணிகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் இணைந்து குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டனர். குறித்த கள விஜயத்தின் பின்னர் […]

இலங்கை செய்தி

எனது சகோதரரின் ரொக்கெட் தனியார் முதலீடு – நாமல் எம்.பி

  • August 28, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்தியாவின் சமீபத்திய நிலவுப் பயணம் தொடர்பான விவாதங்களுக்கு பதிலளித்துள்ளார். மக்கள் பெரும்பாலும் தனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட்டுடன் அதை தொடர்புபடுத்துகிறார்கள் என்பதை அவர் வலியுறுத்தினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் தன்னிடம் கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். “தனியார் துறை திட்டமாக எனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட், அதில் அரசு முதலீடு இருந்தால் அதை கோப் குழு […]

இலங்கை செய்தி

இன்டர்போல் உதவியுடன் இலங்கையில் இந்தியர்கள் இருவர் கைது

  • August 28, 2023
  • 0 Comments

இந்தியாவை சேர்ந்த புக்கி சௌரப் சந்திரகர் மற்றும் அவரது உதவியாளர் ரவி உத்பால் ஆகியோர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சௌரப் சந்திரகர், தாவூத் இப்ராஹிம் என்ற இந்திய பாதாள உலகத் தலைவரின் உதவியுடன், இணையத்தில் சட்டவிரோதமான சூதாட்டத் தளத்தை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும், கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளிலும் பந்தயம் கட்டுவதற்கும் சட்டவிரோதமானது என்றும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க […]

இந்தியா செய்தி

சக மாணவர்களிம் இஸ்லாமிய மாணவரை அடிக்க வைத்த ஆசிரியை!! இந்தியாவில் சம்பவம்

  • August 28, 2023
  • 0 Comments

இந்தியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர், தனது வகுப்பில் படிக்கும் இஸ்லாமிய மாணவியை மற்ற மாணவர்களை தாக்கச் சொல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவத்தால் இந்தியாவின் பல பகுதிகளிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முஸ்லிம் மாணவிக்கு 7 வயது, ஆசிரியர் கூறியதையடுத்து மாணவர்கள் சிலர் வந்து முஸ்லிம் மாணவியின் கன்னத்தில் அடித்த காட்சி வீடியோவில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து, வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் […]

ஆசியா செய்தி

இந்தோனேசியா பாலி கடலில் பதிவான 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

  • August 28, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

வவுனியாவில் அவலம் – 8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 15 வயது சிறுவன்

  • August 28, 2023
  • 0 Comments

வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து 15 வயது சிறுவன் ஒருவன் துஸ்பிரயோகம் செய்துள்ளார். இதன் பின், 8 வயது சிறுவன் வீடு சென்ற பின் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த சிறுவன் சிகிச்சைக்காக […]

இலங்கை செய்தி

காணாமற்போன உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த சங்க இணைப்பாளர் ம.ஈஸ்வரி

  • August 28, 2023
  • 0 Comments

இராணுவத்திடம் உறவுகளை கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியிலே போராடுகிறோம். ம.ஈஸ்வரி இராணுவத்திடம் உறவுகளை கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் போராட்டத்தை மேற்கொள்கிறோம் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (28) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்ச்சியாக வலிந்து காணாமல் […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் – இருவர் கைது

  • August 28, 2023
  • 0 Comments

திருகோணமலை -வெருகல் பிரதேசத்தின் வட்டவான் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இருவரை ஈச்சிலம்பற்று பொலிசார் கைது செய்துள்ளனர். வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரான கதிர்காமத்தம்பி திருநாவுக்கரசு மற்றும் வட்டவான் மரணசங்கத் தலைவர் தர்மலிங்கம் ஜெயகாந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வெருகல் – நாதனோடையில் மணல் அகழ்வதற்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் பின்னனியில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வெருகல் – நாதனோடையில் 1000 கியூப் […]

error: Content is protected !!