உலகம்

EG.5, “எரிஸ் கொரோனா தொற்றுக்கு எதிராக Pfizer தடுப்பூசி செயற்படுகிறது!

  • August 18, 2023
  • 0 Comments

பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், ஃபைஸர் தடுப்பூசி  EG.5, “எரிஸ்” என்று சொல்லப்படுகிற புதிய வகைக்கு கொரோனாவிற்கு எதிராக செயற்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மாறுபாடடைந்த புதிய கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அமெரிக்காவில் 17 வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அதேபோல் உலகின் பிற நாடுகளான  சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் கனடா போன்ற பிற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் […]

இலங்கை

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையின் கிளையொன்றை கொழும்பில் திறக்க நடவடிக்கை!

  • August 18, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையின் கிளையொன்றை கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவும் திட்டம் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையை விட பெரிய மருத்துவமனை கொழும்பில் கட்டப்பட உள்ளது என அவர் கூறியுள்ளார். அந்த நிலத்தில் சர்வதேச அளவில் பெரிய பல்கலைக்கழகம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் காலி முகத்திடலைச் சுற்றியிருந்த போராட்ட நிலைமை காரணமாக அந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சிறப்பு வசதிகளுடன் வெளியீட்டிற்கு தயாராகும் iPhone 15

  • August 18, 2023
  • 0 Comments

ஆப்பில் நிறுவனம் ஐபோன் 15 மாடல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இது பயனர்களால் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ஐபோன் 15-இல் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று தகவல்கள் உறுதி செய்துள்ளன. மிக முக்கியமாக புதிய வடிவத்தை ஐபோன் 15 பெறுகிறது. மேலும், ஐரோப்பிய யூனியன் அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் ரீசார்ஜபிள் சாதனங்களிலும், டைப்-சி சார்ஜிங் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்ததைத் தொடர்ந்து, ஆப்பிள் தங்களின் பிரத்யேக லைட்னிங் சார்ஜருக்கு விடை […]

ஆசியா

வடகொரியா அணுவாயுத திட்டத்திற்கு அதிகளவில் செலவு செய்கிறது – ஐ.நா!

  • August 18, 2023
  • 0 Comments

வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்திற்காக அதிக அளவில் செலவு செய்வதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடகொரியா குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  கொரிய ஜனநாயக மக்கள் குடியரசில் உள்ள மக்கள் கடுமையான அரசியல் அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து, பரவலான மனித உரிமை மீறல்களும் மோசமடைந்து வருகின்றன.  நான் குறிப்பிட்டுள்ள பல மீறல்கள் DPRK இன் […]

இலங்கை

வெள்ளவத்தையின் பல பகுதிகளில் மின்தடை!

  • August 18, 2023
  • 0 Comments

மின்கம்பி ஒன்று சேதமடைந்துள்ளதால் வெள்ளவத்தையின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை பகுதியில் மின்சார கேபிள் ஒன்று சேதமடைந்துள்ளது. இதேவேளை, பல பிரதேசங்களுக்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்தி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை தற்போது முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளது.

ஆசியா

சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

  • August 18, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் குற்றவாளிகள் குற்றத்தை முன்கூட்டியே ஒப்புக்கொண்டால் அத்தகையோருக்கான தண்டனை 30 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்குரிய ஆலோசனைக் குழு முன்வைத்த வழிகாட்டிகளில் அதுவும் ஒன்றாகும். வழக்குகளுக்கும் சீக்கிரமாகத் தீர்வுகாணப்பட்டால் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் உதவியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. தற்போது குற்றத்தை ஒப்புக்கொள்வோருக்கான தண்டனைகள் குறைக்கப்படுகின்றன. ஆலோசனைக் குழு வெளியிட்ட புதிய வழிகாட்டிகள் இப்போதிருக்கும் நடைமுறையை இன்னும் தெளிவாக்குகிறது. குற்றவாளி ஒருவர் எப்போது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் என்பதைப் பொறுத்துத் தண்டனையை எந்த அளவு குறைக்கமுடியும் என்பதை […]

இலங்கை

ஹோமாகம பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை!

  • August 18, 2023
  • 0 Comments

ஹோமாகமவை அண்மித்த பகுதியில் உள்ள  குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஹோமாகம கைத்தொழில் பூங்காவில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் நேற்று (17.08) ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாசக் கோளாறுகளை குறைப்பதற்காகவே இந்த விசேட கோரிக்கையை அந்த பிரிவு முன்வைத்துள்ளது. ஹோமாகம கைத்தொழில் பூங்காவில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கோட்டே நகரசபையின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு – செயலிழக்க செய்த அதிகாரிகள்

  • August 18, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இரண்டாம் உலகப்போரினைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. Colombes (Hauts-de-Seine ) நகரில் இந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதன்கிழமை காலை இந்த வெடிகுண்டு rue Anatole-France வீதியில் இடம்பெற்று வரும் கட்டுமானப்பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து கட்டிடடப்பணியில் ஈடுபட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நேறடறு பிற்பகல் எவ்வித குழப்பங்களும் ஒன்றி அமைதியான முறையில் வெடிகுண்டு அகற்றும் பணி இடம்பெபெற்றது. எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி வெடிகுண்ட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இச்சம்பவத்தின் போது Paris மற்றும் Nanterre […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நிதி உதவி தொடர்பில் புதிய சட்டம்

  • August 18, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பிரசவத்தின் பின்னர் குழந்தைகளை பராமறிப்பதற்கு உரிய நிதி வழங்குவது தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில் எல்டன் கில்ட் என்று சொல்லப்படுகின்ற பிரசவ காலத்திற்கு பிறகு குழந்தைகளை பராமறிப்பதற்கு வழங்கப்படும் நிதி உதவி ஆகும். அதாவது பிரசவ காலத்திற்கு பிறகு குழந்தைகளை பராமறிப்பதற்காக பெற்றோர் வேலைக்கு செல்லாது விட்டால் இவ்வயைாகன எல்டன் கில்ட் சொல்லப்படுகின்ற விசேட நிதியத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கமானது எல்டன் கில்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த விசேட நிதியத்தை பெறுவது தொடர்பான […]

இலங்கை

இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

  • August 18, 2023
  • 0 Comments

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நீர் பாவனையாளர்களுக்கும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இலங்கைக்கான ஒட்டுமொத்த தினசரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கலின் திறன் 9% குறைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.