இலங்கை

தென் மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த நபர் கைது!

  • August 18, 2023
  • 0 Comments

தென் மாகாணத்தில் வாழும் மக்களை அச்சுறுத்தி மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் பாரிய குற்றவாளியின் சீடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய பயாகல பிரதேசத்தை சேர்ந்தவராவார். குறித்த நபர் தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொலைச் சம்பவமொன்றை மேற்கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்  வெளிநாட்டில் உள்ள அம்பலாங்கொட டில்ஷானின் பிரதான சீடன் என்பதுடன், இலங்கையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் […]

இலங்கை

குருந்தூர் மலையில் குவிந்த சிங்களவர்களால் பதற்றமான சூழல் ஏற்படும் அபாயம்

  • August 18, 2023
  • 0 Comments

குருந்தூர் மலையில் குவிந்த சிங்களவர்களால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட காரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 500க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் புத்த பிக்குகள் இணைந்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள சிங்கள மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதன் அடிப்படையில், 3 பேருந்துகள், 2 இராணுவ […]

உலகம்

அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் யூடியூப் – தவறான வீடியோக்கள் நீக்கம்

  • August 18, 2023
  • 0 Comments

மருத்துவத் தகவல் வழிகாட்டு நெறிமுறைப்படி புற்றுநோய் குறித்த தவறான உள்ளடக்கங்கள் கொண்ட வீடியோக்களை யூடியூப்பில் இருந்து நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணி ஆகஸ்ட் 15ம் திகதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்துறை யூடியூப் தளத்தில் வெளியிடக்கூடிய மருத்துவம் சார்ந்த வீடியோக்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தி இருந்தது. மேலும், கொரோனா காலகட்டத்தில் பல தவறான சிகிச்சை முறைகள் யூடியூப் வழியாக பரவியது. இது மக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, யூடியூப் நிறுவனமும் […]

உலகம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – வீதிகளில் திரண்ட மக்கள்!

  • August 18, 2023
  • 0 Comments

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் நேற்று (17.08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமட் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளை விட்டு வீதிகளில் ஒன்று திரண்டுள்ளனர். கொலம்பியாவின் தேசிய புவியியல் சேவை இரண்டாவது நிலநடுக்கத்தை 5.6 ரிக்டர் அளவில் மதிப்பிட்டுள்ளது, நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள ஜன்னல்கள் சேதமடைந்தன. அருகிலுள்ள வில்லாவிசென்சியோவிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ,

ஐரோப்பா

ஷெங்கன் விசா கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

  • August 18, 2023
  • 0 Comments

விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மூன்றாம் நாட்டு பிரஜைகள் ஷெங்கன் விசா கட்டணமாக 80 யூரோ செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் கொசோவோவை நாடுகள், சற்றே குறைவாக 35 யூரோ செலுத்த வேண்டும், மேலும் காம்பியா அதிகமாக 120 யூரோ செலுத்தும் அனைத்து மூன்றாம் நாட்டுப் பிரஜைகளுக்கும் இந்தக் கட்டணம் பொதுவாகப் பொருந்தும். ஷெங்கன் புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில் விசா விண்ணப்பங்களுக்காக அதிக பணம் செலுத்திய முதல் மூன்று நாட்டவர்கள் துருக்கியர்கள், ரஷ்யர்கள் […]

இலங்கை

ரணிலை சந்திக்கும் பசில்?

  • August 18, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று (18.08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் அதிபர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கூட்டம் நடைபெறுவதுடன், இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர்.

வட அமெரிக்கா

கனடாவில் அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்

  • August 18, 2023
  • 0 Comments

கனடாவின் வடக்கே தொலைதூரத்திலுள்ள மிகப் பெரிய நகரமான Yellowknifeஇல் இருந்து சுமார் 20,000 குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார இறுதிக்குள் அந்த நகரத்தைக் காட்டுத்தீ நெருங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பகல் நேரத்துக்குள் நகரத்தை விட்டு அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என்று காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு வரைக்குமான நிலவரப்படி, நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருந்தது. இதற்கிடையே Hay River நகர மக்களும் காட்டுத்தீயை எதிர்நோக்கியுள்ளனர். நகரத்தை விட்டு வெளியேறும்போது தங்களது […]

ஆஸ்திரேலியா

4 வயது சிறுமியால் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள குடும்பம்!

  • August 18, 2023
  • 0 Comments

தங்களுடைய இளைய மகளின் கற்றல் தாமதத்தால் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இந்தியக் குடும்பம் பற்றி பெர்த்தில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது. 4 வயது சிறுமியின் கல்விச் செலவு வரி செலுத்துவோருக்குச் சுமையாக அமையும் என முடிவு செய்து 02 வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உள்நாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறுமியின் தாயார் உணவகம் ஒன்றின் தலைமை சமையல்காரராக உள்ளார் மேலும் அவரும் அவரது கணவரும் சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து […]

ஆசியா

தென்னாப்பிரிக்கா செல்லும் ஜி ஜின்பிங்!

  • August 18, 2023
  • 0 Comments

சீனத் தலைவர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்லவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீ ஜின்பின் செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பின்னர், 2023 ஆம் ஆண்டு சி ஜின்பிங் மேற்கொள்ளும் இரண்டாவது சர்வதேச பயணம் இதுவாகும். பிரேசில், சீனா, இந்தியா, […]

இலங்கை

இலங்கை மது போதையில் தள்ளாடிய மாணவி – விசாரணையில் வெளியான தகவல்

  • August 18, 2023
  • 0 Comments

கெகிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று மதுவருந்தி விட்டு பாடசாலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மாணவியை கைது செய்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தொடர்பு கொள்ள […]