ஏழை மக்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
சென்னை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.கே.இளங்கோவன் என்பவர் தனது பிறந்த நாளை ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டாடியுள்ளார். பட்டாபிராமில் ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் இலவசமாக செல்ல நவீன வசதிகள் கொண்ட 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியுள்ளார். இந்த 2 ஆம்புலன்ஸ்களும் இரண்டு ஓட்டுனர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளது. இதனை புரட்சி பாரதம் கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி துவக்கி வைத்தார். […]













