உலகம்

லண்டனில் யாழ்ப்பாண தமிழர் மூவருக்கு நேர்ந்த சோகம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தில் யாழ்பாணத்தை பின்புலமாக கொண்ட இலங்கை தமிழர்கள் மூவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் கடந்த  10 ஆம் திகதி சனிக்கிழமை மாலை இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்து அவர்கள் கனடாவில் இருந்து பிரித்தானியாவுக்கு உறவினரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த வேளையில் இடம்பெற்றுள்ளதா தெரியவருகிறது.

இரண்டு கார்கள் மோதியத்தி விபத்தில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குவதாகவும், விபத்தில் சிக்கிய ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சென்ற வருடம் காலமானார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

தாய் சுபத்ரா மற்றும் அவரது மகள் அஸ்மிதா ஆகியோரே கார் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அவரது மகன் நவீன் இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவர்கள் பயணம் செய்த பிஎம்டபிள்யூ காரைச் செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வெள்ளை நிற பிஎம்டபிள்யூ (BMW 220) மற்றும் பழுப்பு நிற மேர்சிடிஸ் (Mercedes C200) ஆகிய இரண்டு கார்கள் மோதியே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் சகோதரியின் இறுதிச் செலவு மற்றும் பிற தனிப்பட்ட செலவுகளுக்கு சுபத்திராவின் மகன் நவீன்க்கு உதவமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

go fund me (https://www.gofundme.com/) என்னும் பக்கத்தில் சென்று. நன்கொடைக்கான அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிசெஸ்டர் (Chichester) நகர் அருகே விபத்து நடைபெற்ற Duncton கிராமப் புறத்தில் வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு கார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக பொலிஸார் பொதுமக்களது உதவியை நாடியுள்ளனர்.

(Visited 45 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content