வட அமெரிக்கா

இரவில் நாய் குரைப்பதைக் கேட்டு எழுந்த கனேடிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • April 22, 2023
  • 0 Comments

கனேடிய பெண் ஒருவர், இரவில் விடாமல் நாய் குரைப்பதைக் கேட்டு என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றிருக்கிறார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் Sharon Rosel என்னும் பெண், இரவு 3.00 மணிவாக்கில் பயங்கரமாக நாய் குரைப்பதைக் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார்.அப்போது, கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் கதவு திறந்திருப்பதை அவர் கவனித்துள்ளார். யார் கதவைத் திறந்தது என்று பார்க்க அவர் செல்ல, அப்போதுதான், கார் கதவைத் திறந்தது மனிதர்கள் அல்ல என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது. கார் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் போர்க் குற்றங்களை விசாரிக்க மென்பொருளை பயன்படுத்தும் உக்ரைன்!

  • April 22, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் போர்க்குற்றங்களை விசாரிக்க உக்ரைன் மென்பொருளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மென்பொருள் உளவுத்துறை தரவு மற்றும் செயற்கைக்கோள் படங்களை ஒருங்கிணைத்து எதிர்கால நிகழ்வுகளில் வரைப்படம் மூலமாக ஆதாரங்களை உருவாக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ,அமெரிக்க தரவு நிறுவனமான பலன்டிர் டெக்னாலஜிஸ் இன்கின் உதவுயுடன் குறித்த மென்பொருள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனில் ரஷ்யா படையெடுத்ததில் இருந்து 78,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

அதிகரிக்கும் கொலை சம்பவங்கள் : பாதுகாப்பிற்காக முப்படைகளையும் களமிறக்கிய ஜனாதிபதி!

  • April 22, 2023
  • 0 Comments

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும்,  அமைதியைப் பேணுவதற்காகவும் 25 நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரையும் களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் பிரசூரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை என்பன கொழும்பு,  கம்பஹா,  களுத்துறை,  கண்டி,  மாத்தளை,  நுவரெலியா,  காலி, மாத்தறை,  அம்பாந்தோட்டை,  யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி,  மன்னார்,  வவுனியா,  முல்லைத்தீவு,  […]

இலங்கை

நெடுந்தீவு படுகொலை – யாழில் படகுசேவை நிறுத்தம்!

  • April 22, 2023
  • 0 Comments

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்குப் பயணம் செய்யவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு பகுதியில் இன்று  அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை […]

ஐரோப்பா

ஸ்பெயினில் திடீரென தீப்பிடித்த ஹொட்டல் ; இருவர் பலி

  • April 22, 2023
  • 0 Comments

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியானதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இத்தாலிய உணவகமான Burro Canaglia Bar & Resto என்ற உணவகம், தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அலறிய வாடிக்கையாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற முயற்சித்துள்ளனர்.ஆனால், வெளியேறும் வழிக்கு அருகிலேயே தீப்பிடித்திருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதில் இருவர் […]

வட அமெரிக்கா

செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ள அதிபர் ஜோ பைடன்

  • April 22, 2023
  • 0 Comments

2023ம் ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதனை முன்னிட்டு ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான செயலாளர் டொனால்ட் லூ செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நிச்சயமாக 2023 ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும். இந்தியா ஜி-20 மாநாட்டை நடத்துகிறது. அமெரிக்கா ‘ஆசிய-பசிபிக் பொருளாதார […]

ஐரோப்பா

ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் ட்ரோன்களை பயன்படுத்தும் ரஷ்யா!

  • April 22, 2023
  • 0 Comments

ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் ட்ரோன்களின் புதிய தொகுப்பை  ரஷ்யா பயன்படுத்தி வருவதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. காமிகேஸ் ட்ரோன்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக உக்ரைனில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க ஆய்வுக் குழுவின் கூற்றுப்படி, 25 நாட்களில் முதல் முறையாக இலக்கு வைக்கப்பட்ட நகரங்களில் கெய்வ் ஒன்றாகும். இந்த தாக்குதலுக்கு குறித்த வகை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ட்ரோன்கள், ஒவ்வொன்றும் சுமார் $20,000  செலவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. , அவை பெரும்பாலும் பெரிய திரள்களில் […]

ஐரோப்பா

ஆறு சிறுத்தை 2A4 டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பும் ஸ்பெயின்!

  • April 22, 2023
  • 0 Comments

ஸ்பெயின் ஆறு சிறுத்தை 2A4 டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பிவைத்துள்ளதாக கடற்படை கண்காணிப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட  2A4 டாங்கிகள் மற்றும் கவசப் பணியாளர்கள் கேரியர்கள் சரக்குக் கப்பலின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஸ்பெயினின் பாதுகாப்பு மந்திரி மார்கரிட்டா ரோபிள்ஸ் இந்த மாத தொடக்கத்தில்  10 சிறுத்தை 2A4 டாங்கிகளை அனுப்புவதாக உறுதியளித்திருந்தார். இதன்படி முதல் தொகுதியாக ஆறு டாங்கிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன்  40 டேங்க் பணியாளர்களுக்கும் 15 மெக்கானிக்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.

இலங்கை

நீதி கிடைக்குமென நம்பிக்கை இல்லை – பாட்டாலி சம்பிக்க

  • April 22, 2023
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இன்னும் நான்கு தீர்க்கப்படாத கேள்விகள் எஞ்சியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவ உளவுத்துறை தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு உணவளித்தது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் பதில் இல்லை என்று சுட்டிக்காட்டினார். இந்த அமைப்பு ஏன் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலை அங்கீகரித்தது என்றும் ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் […]

இலங்கை

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய ஐ.நா!

  • April 22, 2023
  • 0 Comments

இலங்கை பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு தீர்ப்பாயத்தின் 17பேரடங்கிய   நீதியரசர் குழாம் இலங்கைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரொருவர் சுமார் ஒருமாதகாலமாக கிரிக்கெட் துடுப்புமட்டையால் தாக்கப்பட்டமை, மின்சாரத்தாக்குதல்,  வன்புணர்வு என பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பில் கடந்த 2014 ஆமு் ஆண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மனித […]