வட அமெரிக்கா

இரவில் நாய் குரைப்பதைக் கேட்டு எழுந்த கனேடிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கனேடிய பெண் ஒருவர், இரவில் விடாமல் நாய் குரைப்பதைக் கேட்டு என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றிருக்கிறார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் Sharon Rosel என்னும் பெண், இரவு 3.00 மணிவாக்கில் பயங்கரமாக நாய் குரைப்பதைக் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார்.அப்போது, கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் கதவு திறந்திருப்பதை அவர் கவனித்துள்ளார். யார் கதவைத் திறந்தது என்று பார்க்க அவர் செல்ல, அப்போதுதான், கார் கதவைத் திறந்தது மனிதர்கள் அல்ல என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது.

கார் கதவின் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் கிடக்க, கரடி ஒன்று Sharon தனது காருக்குள் வைத்திருந்த சோடா கேன்களை எடுத்து குடித்துக்கொண்டிருந்திருக்கிறது.Sharon தனது காருக்குள் 72 சோடா கேன்களை வைத்திருந்திருக்கிறார். அவற்றில் 69 கேன்களை அந்தக் கரடி காலி செய்துவிட்டதாம்.

இரவில் நாய் குரைப்பதைக் கேட்டு எழுந்த கனேடிய பெண்: கண்ட எதிர்பாராத காட்சி | Canadian Woman Woke Up Barking Dog In Middle Night

கரடியைத் துறத்துவதற்காக, மாடியிலிருந்து, அதன் மீது தண்ணீரை வீசி அடிப்பது முதல் என்னென்னவோ செய்து பார்த்திருக்கிறார் Sharon. ஆனால், கரடி அசைந்தபாடில்லையாம். அது தன் வேலையை முடித்தபிறகுதான் அங்கிருந்து சென்றுள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content