ரஷ்யாவின் மற்றுமோர் முக்கிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள முக்கிய எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இது ரஷ்யாவின் போருக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு என்றும், அப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய ரஷ்ய கடற்படைத் தளமும் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.
இந்தத் தாக்குதல் குறித்து, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ், அந்நகரம் ஒரு பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபகாலமாக, ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான நீண்ட தூர ஆளில்லா விமானத் தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது, இது பரவலான எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.
இதன் விளைவாக, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் சுமார் 43% முடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





