ஐரோப்பா செய்தி

மொண்டினீக்ரோவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக மிலாடோவிக் தெரிவித்துள்ளார்.

மொண்டினீக்ரோவின் முன்னாள் பொருளாதார அமைச்சர் ஜகோவ் மிலாடோவிக், தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தற்போதைய பதவியில் இருந்த மிலோ டிஜுகனோவிச்சை எதிர்த்து, சிறிய பால்கன் குடியரசில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது எனவும் கூறியுள்ளார்.

ஐரோப்பா நவ் இயக்கத்தின் துணைத் தலைவரான 37 வயதான மேற்கத்திய கல்வி கற்ற மிலாடோவிக், ஊழலைக்  கட்டுப்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சக முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசு செர்பியாவுடனான உறவுகளை வலுப்படுத்தவும் உறுதிமொழிகள் மீது பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறோம். எனவே உங்களுக்கு மகிழ்ச்சியான வெற்றியை வழங்க விரும்புகிறேன், என்று மிலாடோவிக் தனது வலது-மத்திய ஐரோப்பா நவ் இயக்கத்தின் போட்கோரிகாவில் உள்ள அதன் கட்சி தலைமையகத்தில் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி