செய்தி தமிழ்நாடு

மாபெரும் ஆண்களுக்கான கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு வடக்கு மாவட்ட சார்பில் வடக்கு ஒன்றிய சார்பில் ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயாஏற்பாட்டில்தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.

இந்த கபடி போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டது இறுதியாக தமிழ்நாடு காவல்துறை அணியினரும் கோமாபுரம் அணியினரும் களம் கண்டனர் இதில் தமிழ்நாடு காவல்துறை அணியினர் முதலிடம் பிடித்து முதல் பரிசையும் கோப்பையையும் தட்டிச் சென்றனர்.

இரண்டாம் பரிசு கோமபுரம்  அணியினர் மூன்றாம் பரிசு பகட்டுவான் பட்டிஅணியினர் ரொக்கம் கோப்பையும்  தட்டிச் சென்றனர் இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவவி மெய்ய நாதன் கலந்து கொண்டு அரையிறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.

இறுதி ஆட்டத்தை வடக்கு மாவட்ட செயலாளர் கே கே செல்ல பாண்டியன் தஞ்சாவூர் மனிதநேய பண்பாளர் எஸ் எஸ் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்கள்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா செய்திருந்தார் நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் வரவேற்பு உரையாற்றினார் நகர செயலாளர் ராஜா நன்றி உரையாற்றினார்.

 

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content