ஐரோப்பா

பிரித்தானியாவில் பாலியல் மோசடி : ஆண்களுக்கு வலைவீசும் கும்பல்!

பிரித்தானியாவில் 20 வயதுகளில் உள்ள ஆண்கள் எளிதில் பாலியல் மோசடிகளுக்குள் சிக்கிக்கொள்வதாக புதிய பகுப்பாய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.

பாலியல் மிரட்டல் என்பது, குற்றவாளிகள் ஒரு வெகுமதியை, பொதுவாக பணத்தை, வழங்காவிட்டால் தனிப்பட்ட பாலியல் படங்கள், வீடியோக்கள் அல்லது முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மிரட்டி பணம் பறிக்கும் செயற்பாடாகும்.

சுமார் 50 வழக்குகளை ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இருபது வயதுகளில் இருப்பதும், பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் ஆண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இவ்வாறான மோசடியில் 13 முதல் 70 வரை இருப்பவர்கள் அதிகளவில் சிக்கிக்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுடன் நட்பு ஏற்படுத்தி, அந்தரங்கப் படங்களைக் கேட்டு அழுத்தம் கொடுத்து, பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக அந்த பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதற்கு முன் சற்று யோசிக்குமாறும், மோசடிக்காரரின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு குறைந்த தளங்களுக்கு மாறுவதைத் தவிர்க்குமாறும், அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!