பயண எச்சரிக்கை புதுப்பிப்பு – மத்தியக்கிழக்கில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் அமெரிக்கர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் திருத்தப்பட்ட பயண எச்சரிக்கையை வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டது.
அதில் “மத்திய கிழக்கில் நிலவும் அதிக பதற்றங்கள் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாகப் பதற்றம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன,” என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது அல்லது அதன் வழியாக வேறு நாடுகளுக்கு செல்வதை பெருமளவு தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.





