டெல்லியில் 03 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியத் தலைநகர் புது டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூன்று பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பாடசாலை வளாகத்தில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் செய்தி ஊடாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் பெறப்பட்ட உடனேயே மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன, ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மின்னஞ்சல் செய்திகளை அனுப்பிய நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியப் பாதுகாப்புப் படைகள் தொடங்கியுள்ளன.




