ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாப்பட்டுள்ளது.
இது தொடர்பான இந்திய பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ்தள பதிவு வருமாறு ,
” கொழும்பில் இன்று இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் மிகச் சிறந்த முறையில் உயர்மட்டச் சந்திப்பு ஒன்றினை நடத்தினேன்.
பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவரது அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
நாகரிகத் தொடர்புகளைக் கொண்ட நெருங்கிய அண்டை நாடுகள் மற்றும் கடல்சார் பங்காளிகள் என்ற முறையில், இந்தியாவும் இலங்கையும் நமது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும், நமது இரு நாட்டு மக்களின் நலனுக்கும், நமது பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதியை மீண்டும் வலியுறுத்தினோம்.” – என்றுள்ளது.





