கொஸ்கொடவில் துப்பாக்கிச்சூடு
கொஸ்கொட பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கொஸ்கொட தாரகா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் ஒருவரைக் குறிவைத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9 மி.மீ. துப்பாக்கியைக் கொண்டு இருமுறை சுட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் இரு முறையும் துப்பாக்கி வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கொஸ்கொட பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




