செய்தி

கியூபெக்கில் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி நபர் ஒருவர் பலி

கியூபெக்கில் Quebec உள்ள மாண்ட்ரீல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில், ஏர்பஸ் ஏ350 விமானம் மோதியதில் விமான நிறுத்தப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 39 வயதான ஆஸ்கார் ரொபாயோ Oscar Robayo என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாரிஸ்-ஓர்லிக்குச் சென்றுகொண்டிருந்த பிரெஞ்சு விமானமான BF5761-ஐ பின்னோக்கி தள்ளும்போது பணியாளர் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும், கியூபெக் மரண விசாரணை அதிகாரி அலுவலகமும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளன.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி