இலங்கை செய்தி

இலங்கை முழுவதும் நீர் தடை ஏற்படும் அபாயம் – விடுக்க்பபட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை பூராகவும் நீர் விநியோக நடவடிக்கையை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்போம்  என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

எமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தை பாரிய போராட்டமாக மாற்றி,  நீர் விநியோக நடவடிக்கையை இடைநிறுத்துவோம் என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருக்கும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக அதன் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

சுகயீன விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் அந்த தினங்களில் பணியாற்றியமைக்கான கொடுப்பனவை 10 நாட்களுக்குள் வழங்குமாறு எமது தொழிற்சங்கம் கடந்த 3 ஆம் திகதி நீர்வழங்கல் அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளித்தது.

என்றாலும் எமது இந்த சாதாரண கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த கவனமும் செலுத்தப்படாமல் இருக்கிறது.  அதனால் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கை தவிர, அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகிக்கொண்டோம்.  நிர்வாக சேவை அதிகாரிகளால் எமது கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை வழங்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆனாலும் குறைந்த பட்சம் நீர்வழங்கல் சபை தலைவரோ அல்லது அமைச்சரோ எமது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கூட நேரம் வழங்கவில்லை.

அதனால் நாங்கள் எமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்படுகின்ற அசெளகரியங்களுக்கு குறித்த அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும்.

எமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்றை விரைவாக வழங்க தவறினால் சில தினங்களில் தொழிற்சங்க போராட்டத்தை நாடுபூராகவும் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறோம்.

இதன் மூலம் நாடுபூராகவும் நீர் விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்போம். அவ்வாறான நிலை ஏற்பட்டால் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களிலும் நீர் விநியோகம் தடைப்படும் அபாயம் இருக்கிறது என்றார்.

 

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content