இலங்கை

அனோஜனின் வழக்கு தொடர்பில் சிறப்பு கவனம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை  எதிர்கொண்டுள்ள அனோஜனின் வழக்கு தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு  மற்றும் சுற்றுலா அமைச்சு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்தும், சம்பந்தப்பட்ட சம்பவத்தின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சவூதி அரேபியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராசா தனது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள, அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்