அனல் கக்கும் அரசியல் களம்: மஹிந்த, அநுர இன்று களத்தில்
வடமத்திய மாகாணத்தில் இன்று (12) அரசியல் புயல் மையங்கொள்ளவுள்ளது. வடமத்திய மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் பேரணியை நடத்தவுள்ளது.
மற்றுமொரு முக்கிய மாவட்டமான பொலன்னறுவையில் தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகளின் பேரணி இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்துக்கு மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார்.
எதிரணிகளைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
பொலன்னறுவையில் தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகளின் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஈராண்டுகள் ஆட்சி, நாட்டுக்கு மாட்சி என்ற தொனிப்பொருளிக்கீழ் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மறுபுறத்தில் ஈராண்டுகளில் அரசாங்கம் எதையும் செய்யவில்லை, அரசியல் பழிவாங்கலை மட்டுமே முன்னெடுக்கின்றது என சுட்டிக்காட்டியே மொட்டு கட்சி கூட்டம் நடத்துகின்றது.





