ஆப்பிரிக்கா

சூடான் மோதலில் பிரெஞ்சு நாட்டவர் பலி!

உள்நாட்டு மோதல் காரணமாக சூடானில் இருந்து தங்கள் நாட்டு பிரஜைகளை வெளியேற்றுவதில் பிரெஞ்சு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

அவ்வாறாக அங்கிருந்து வெளியேறும் போது பிரஞ்சு நாட்டவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  கார்ட்டூமில் இருந்து வெளியேறும்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் யார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது என்ற தகவல் வெளியாகவில்லை. மாறாக மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்று காலை தூதரகத்திற்கு வெளியே இருந்த வாகனத் தொடரணி மீது  ராணுவ விமானத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!