ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கொவிட் தடுப்பு ஊசி தயாரித்த பயோன்டெக் நிறுவனத்தின் மீது தடுப்பு ஊசி  செலுத்திக்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து பலர் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள்.

கொரோனா தொற்றானது உலக நாடுகளை கடந்த இரு ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்திருந்தது.

விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தங்களது முயற்சியால் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு ஊசிளை தயாரித்த நிலையில மக்கள் அதனை செலுத்தியும் வந்துள்ளனர்.

இதேவேளையில் சிலர் இவ்வாறு கொரோனா தடுப்பு ஊசி செலுத்திய பின்  தங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனா தடுப்பு ஊசி உற்பத்தியில் முன்னோடி நிறுவனமான பயோன்டெக் என்ற நிறுவனத்திற்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

அதாவது டுசில்டோவில் உள்ள சட்ட தரணிகள்  அமைப்பொன்றும் இதே வேளையில் பிரெங்புட் இல் உள்ள சட்ட தரணிகள் அமைப்பு ஒன்றும் பல விண்ணப்பதாரிகளின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்குகளை நடாத்தி வருவதாக தெரிய வந்திருக்கின்றது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி