உலகம் செய்தி

ஆஸ்திரேலிய வீரரின் மகன் பாலியல் வழக்கில் சிக்கினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரின் இளைய மகன், பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

மெல்போர்ன் நகரில், தனது நண்பரின் காதலியான ஒரு பெண்ணைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த 23 வயது இளைஞரை, டிசம்பர் 5 அன்று நடந்த இரண்டு வார விசாரணையின் முடிவில் நடுவர் குழு குற்றவாளி என்று உறுதி செய்தது.

தாக்குதல் நடந்த அன்று, காதலன் போல நடித்து அந்தப் பெண்ணை இருட்டில் இளைஞர் தாக்கியதுடன், பின்னர் கைகளைக் கட்டிப் போட்டு இரண்டாவது முறையும் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

விக்டோரியா நீதிமன்றத்திற்கு வெளியே பேசிய குற்றவாளியின் தந்தை, கண்ணீர் மல்க, “எங்கள் மகன் நிரபராதி என்று கூறுகிறான், நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

‍இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு அடுத்த வாரம் புதன்கிழமை தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி