EU-வில் சேருவதற்கான பேச்சுவார்த்தை – ஐஸ்லாந்து மக்கள் நிராகரிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு எதிராக ஐஸ்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர்.
நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இன்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம் என 52.8 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் பேச்சுவார்த்தைகளை தொடங்க சம்மதம் தெரிவித்து 47.2 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர். மிகவும் சொற்ப வித்தியாசத்தில் பேச்சுவார்த்தை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளின் படி பார்க்கும்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதிக்க மனப்பான்மை ஐஸ்லாந்து மக்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நெருக்கமாகத் தள்ளவில்லை என்பதை காட்டுகிறது.




