இலங்கை செய்தி

இலங்கையில் மீண்டும் work from home?

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் ‘work from home ’ சிஸ்டம் பற்றி எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

பொருளாதார நிலை மற்றும் எரிபொருள் சேமிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு ‘work from home’ சிஸ்டம் பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட்டதா என கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“ இது பற்றி அமைச்சரவையில் பேசப்படவில்லை. அது பற்றி அரசாங்கத்துக்குள் கலந்துரையாடப்படவில்லை.” – என்றார்.

அதேவேளை, எரிபொருள் விலையேற்றம் இடம்பெறுமா என எழுப்பட்ட கேள்விக்கு,

“ பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் தெரியப்படுத்தவில்லை.” எனக் குறிப்பிட்டார் அமைச்சர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!