இலங்கை

இலங்கையில் அரிசி பற்றாக்குறை ஏற்படுமா? முக்கிய ஆராய்ச்சியாளர் வெளியிட்ட கருத்து

இயற்கை பேரிடர் காரணமாக இலங்கையில்  நெல் சாகுபிடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் ஆண்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படாதென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உணவு முறைகள் பிரிவின் தலைவரும் மூத்த ஆராய்ச்சியாளருமான டபிள்யூ.எம். துமிந்த பிரியதர்ஷன கூறுகிறார்.

“இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிவரை, இயற்கை அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து எட்டாயிரம் (108,000) ஹெக்டேர் நெல் சாகுபடி முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்த சூழ்நிலையானது நெல் சாகுபடிக்கு ஏற்பட்ட சேதத்தைக் கருத்தில் கொண்டு, மொத்த நெல் உற்பத்தியில் ஒன்பது முதல் பன்னிரண்டு சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும்.

தற்போது பயிரிடப்படும் நிலத்தின் பரப்பளவையும் சேதமடைந்த நிலத்தின் பரப்பளவையும் கருத்தில் கொண்டால் இந்த பெரும் போகத்தில் (2025/2026) 2.5 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி உற்பத்தியை எதிர்பார்க்கலாம்.

இதன்மூலம் உற்பத்தி நாட்டின் நுகர்வோர் தேவைகளில் குறைந்தது ஏழு மாதங்களுக்கு போதுமான அரிசியை உற்பத்தி செய்ய முடியும்“ என்று துமிந்த பிரியதர்ஷன கூறுகிறார்.

அடுத்தாண்டு சிறுபோகம், மத்தியபோகம் மற்றும் பெரும்போக உற்பத்திகளில் பாதிப்பு ஏற்படாவிடின் அரிசியை இறக்குமதி செய்யும் தேவை ஏற்படாதெனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பெரும் போகத்தில் கிடைத்த அதிக மழை காரணமாக, 2026 சிறுபோகத்தில் 0.5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  அவர் மேலும் கூறியுள்ளார்.

TK

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்