உலகம்

ஜார்ஜியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ – திணறும் தீயணைப்பு படையினர்!

தென்கிழக்கு ஜார்ஜியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயினால்  87 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு பெரும் காட்டுத்தீ பரவி வருவதாகவும், அதில் 7 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மக்கள் மேற்படி காட்டுத்தீயில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 20 அன்று மின்கம்பிகள் மோதியதால் ஏற்பட்ட காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி நிலவரப்படி 31 சதுர மைல்களுக்கு மேல் பரவியுள்ளது.

மணிக்கு 15 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், “தீ விபத்துகள் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வறட்சி, காற்று, காலநிலை மாற்றம் மற்றும் 2024-ல் ஹெலன் சூறாவளியால் மரங்கள் வீழ்ந்தது ஆகியவற்றால் நிலமை மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!