உலகம்

எச்சரிக்கை : புதிய உச்சம் தொட்ட வெப்ப உயர்வு!

மனிதனால் தூண்டப்பட்ட புவி வெப்பமயமாதலின் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளதாக சமீபத்திய ‘உலகளாவிய காலநிலை மாற்றத்தின் குறிகாட்டிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 நாடுகளில் உள்ள 56 நிறுவனங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் பகுப்பாய்வின்படி வெளியிடப்பட்டுள்ள இவ் அறிக்கையில்,  2025-ஆம் ஆண்டில் மனிதனால் தூண்டப்பட்ட புவி வெப்பமயமாதல் 1.37°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கணிப்புகள் பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5°C வெப்பமயமாதல் வரம்பை அபாயகரமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய அளவிலேயே உமிழ்வுகள் தொடர்ந்தால், 2030-ஆம் ஆண்டளவில் 1.5°C வரம்பு கடக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“முக்கியமாக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால், பசுமை இல்ல வாயு வெளியேற்றம் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தில் உள்ளது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்