ஐரோப்பா செய்தி

Nigel Farage இற்கு ராஜதந்திர வட்டாரத்திலும் செல்வாக்கு: லண்டனில் நடந்த முக்கிய சந்திப்பு

பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிவிவகார அமைச்சர் Abdullah bin Zayed , பிரிட்டனின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன்ஓர் அங்கமாக, பிரிட்டனின் வளர்ந்து வரும் அரசியல் சக்தியாகப் பார்க்கப்படும் ‘Reform UK’ கட்சியின் தலைவர் Nigel Farage உடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பின் போது, அமீரகத்தின் மீது ஈரானால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அதன் விளைவாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பதற்ற நிலைமைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளை (Strategic Relations) மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.

பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சிசபைத் தேர்தலில் Nigel Farage தலைமையிலான Reform UK கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது.

இதன் காரணமாக, பிரிட்டனின் அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமர் பதவிக்கான முக்கிய வேட்பாளராக Nigel Farage கருதப்படுகிறார்.

இவ்வாறானதொரு வலுவான உள்நாட்டு அரசியல் பின்புலத்திற்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சர் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளமையானது, சர்வதேச ராஜதந்திர வட்டாரங்களிலும் (Diplomatic Circles) Nigel Farage ற்கான செல்வாக்கு மற்றும் அங்கீகாரம் கணிசமாக அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, பிரிட்டன் பயணத்தின் போது அமீரக வெளிவிவகார அமைச்சர், பிரிட்டனின் தற்போதைய துணைப் பிரதமரையும் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!