இலங்கை

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் : குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு முன் பதற்றம்!

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம்.

குடிவரவு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய காரியாலயத்திற்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்காக நாளாந்தம் ஏராளமானோர் வருகின்றனர்.

இந்த அலுவலகத்தில் இருந்து ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 150 பேருக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

எனினும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கான முறையான முறைமை இல்லாததால் அங்கு வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்த அலுவலகம் அருகே பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

தீவின் பல பகுதிகளிலிருந்தும் வந்த மக்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்காக இந்த அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இரவைக் கழிக்க வேண்டியுள்ளது.

பல நாட்களாக அங்கு தங்கியிருந்த மக்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு கிடைக்காததால், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், அங்கிருந்த மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

குடிவரவு திணைக்களம் தமக்கு குறிப்பிட்ட இலக்கத்தை வழங்கிய போதிலும், அந்த இலக்க வரிசையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன், பல நாட்களாக குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக சுற்றித்திரியும் இவர்களை புறக்கணித்து பல்வேறு சட்டவிரோத முறைகளில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வேறு நபர்களுக்கு வழங்குவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content