இலங்கை செய்தி

பெரும் கொள்ளைக் கும்பலை சேர்ந்த மூவர் கைது

கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டை உடைத்து சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிச் சென்ற மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ‘கபரா சுரேஷ்’ என்ற நபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் காணப்பட்ட கிட்டத்தட்ட 06 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களில் பிட்டகோட்டே பபா என்ற பெண்ணும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், இரண்டு தங்க நெக்லஸ்கள், இரண்டு மோதிரங்கள், இரண்டு பென்டன்ட்கள் மற்றும் உருகிய 22 கரட் தங்க கட்டி, 18 கரட் மற்றும் 15 கிராம் தங்க கட்டிகள், 1750 பவுன் ஸ்ரேலிங் நோட்டுகள், 100 டொலர் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கிருலப்பனை மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த கபர சுரேஷ் என்ற நபர் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு 10 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி பிணையில் வெளிவந்து டிசம்பர் 10ஆம் திகதி கோடீஸ்வரனின் வீட்டுக்குள்அத்துமீறி நுழைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிசம்பர் 15ஆம் திகதி, ஹெரோயின் போதைப்பொருளுடன் வத்தளை பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், போலியான பெயர் சூட்டப்பட்டமையினால், முன்னைய குற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content