ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சிக்கு இடமில்லை: எதிரணி உத்தரவாதம்!
xr:d:DAFPA4-cxsE:322,j:45519637957,t:23012005
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித எவ்வித சூழ்ச்சிகளிலும் ஈடுபடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்நாட்டை ஐந்து வருடங்களுக்கு ஆள வேண்டும். தமது பொறுப்பை நிறைவேற்றாமல் அவர்கள் தப்பிச்செல்ல முடியாது. #
நாம் ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சிசெய்யவில்லை. அதற்கான உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம்.” எனவும் அவர் கூறினார்.
கடந்த ஒரு வருடமாக நாம் எவ்வித பேரணியையும் நடத்தவில்லை. நாசகார செயலிலும் ஈடபடவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்திருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் எனவும் முஜிபூர் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பினார்





