இலங்கை செய்தி

இலங்கை ரக்பி மீதான தடையை நீக்கிய உலக ரக்பி கவுன்சில்

இலங்கை ரக்பிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை உலக ரக்பி கவுன்சில் நீக்கியுள்ளதாக விளையாட்டு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயில் இடம்பெற்ற சந்திப்பின் போது, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் ஆசிய ரக்பி தலைவர் கைஸ் அல்-தலாய் இதனைத் தெரிவித்தார்.

அந்த வகையில், உலக ரக்பி நிர்வாக சபையின் தீர்மானம் எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பிராந்திய ரக்பி நிர்வாக சபையின் தலைவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.

மே 17 அன்று, உலக ரக்பி கவுன்சில், இலங்கை ரக்பிக்கு தற்காலிக தடை விதித்தது,

உலக ரக்பி கவுன்சில் மற்றும் ஆசியா ரக்பி சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பிராந்திய சங்கம் அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து இலங்கையில் ரக்பிக்கு குறைந்த பட்ச இடையூறு ஏற்படுவதை உறுதிசெய்யும் என்று ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த இடைநிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை