இலங்கை

காசாவையும் இலங்கையையும் வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை – ரணில்

காசாவையும் இலங்கையையும் வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை – ரணில்

காசாவையும் இலங்கையையும் வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காசா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐ.நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே தூய்மையான கரங்களுடன் வந்தால் அடுத்த செப்டெம்பர் மாதம் இடம்பெறும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பதிலளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிமடை புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனத்திற்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேற்குலக நாடுகள் இலங்கை மற்றும் காசா தொடர்பில் பின்பற்றும் நியதிகளின் வேறுபாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, தூய்மையான கரங்களுடன் உலகளாவிய தேவைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content