இலங்கை செய்தி

பரபரப்பை ஏற்படுத்திய கொழும்பு துறைமுகத்திற்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

கொழும்பு துறைமுகத்தின் 06ஆம் இலக்க நுழைவாயிலுக்கு அருகில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் கொழும்பு புளூமெண்டல் தெருவைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, அந்த இடத்தில் இருந்து இரும்பை திருடுவதற்கு இரண்டு நபர்களை பாதுகாப்பு அதிகாரி தடுத்ததையடுத்து, கோபமான கும்பல் அந்த இடத்திற்கு வந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க ஒருவர் முயற்சித்ததாகவும், மற்றொரு பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

(Visited 4 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content