ஐரோப்பிய நாடுகளின் சாமர்த்தியம்!! பில்லியன் கணக்கில் சேமிப்பு!
ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்துள்ள சூரியசக்தித் திட்டங்கள் 2026-ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான செலவீனங்களை தடுத்து சேமித்துள்ளதாக புதிய பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான போர் நடவடிக்கை எரிவாயு விலைகளை மிக அதிகமாக வைத்திருபதுடன், புதைபடிவ எரிபொருள் இறக்குமதியின் செலவுகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இந்த சூரிய திட்டம் (சோலார் சேமிப்பு திட்டம்) ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு கைக்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சேமிப்பு திட்டம் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக €136 மில்லியன் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி ஜுன் 02 ஆம் திகதிவரையான காலப்பகுதிவரை €12.8 பில்லியன் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025-ல், புதைபடிவ எரிபொருட்களை விட காற்று மற்றும் சூரிய ஆற்றல் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்முறையாக அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது தூய்மையான மின்சாரத்திற்கான மாற்றத்தில் ஒரு “முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





