இலங்கை

ஏழு பெண்களால் இளம் பிக்குவிற்கு நேர்ந்த கதி! இலங்கையில் நடந்த பகீர் சம்பவம்

குருநாகல் – நிக்கவரெட்டிய பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் ஏழு பெண்களினால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 25ம் திகதி நிக்கவரெட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 22 வயதான பௌத்த பிக்குவே இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த பெண்கள் பிக்கு தங்கியிருந்த விகாரைக்குள் புகுந்து, பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களான பெண்கள் பிக்குவை விகாரையில் இருந்து விலகுமாறும், பிக்கு அணிந்திருந்த காவி உடையை கழற்றுமாறும் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பிக்கு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக உடல் மற்றும் மன ரீதியான பாதிக்கப்பட்ட பிக்கு புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பெண்களையும் பொலிஸார் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content