இலங்கை செய்தி

அர்ச்சுனா எம்.பி. கைது: கைத்துப்பாக்கி பறிமுதல்!

  • April 27, 2026
  • 0 Comments

கைத்துப்பாக்கியைகாட்டி மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். இளவாலைப் பொலிஸாரினால் அவர் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியிலுள்ள காணி தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினை இருந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மேற்படி காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை […]

உலகம் செய்தி

புடினை சந்திக்கிறார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

  • April 27, 2026
  • 0 Comments

  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைVladimir Putin , ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச்சந்திப்பு பெரும்பாலும் இன்று நடைபெறும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா மற்றும் ஓமானுக்கான விஜயத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின்போது ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து, பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். தெஹ்ரான் மற்றும் மாஸ்கோ இடையே நிலவும் நெருக்கமான உறவை வலுப்படுத்தவும், முக்கிய […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி சிறுமி கடத்தல்!

  • April 27, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் Alice Springs பகுதியில் பூர்வக்குடி முகாமில் இருந்து ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று Northern Territory காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். நேற்றிரவு முதல் காணாமல் போன அந்தச் சிறுமியைத் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஷரோன் கிரானைட்ஸ் என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இந்தச் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் ஜெபர்சன் லூயிஸ் என்பவரைத் தேடி வரும் […]

அரசியல் இலங்கை செய்தி

21 மே தின பேரணிகளை நடத்துகிறது NPP!

  • April 27, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இம்முறை மாவட்ட ரீதியிலேயே நடத்தப்படவுள்ளது. பிரதி அமைச்சர் ரத்ன கமகே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். எரிசக்தி தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களைக்கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மாவட்ட ரீதியில் 21 மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளன. தேசிய மக்கள் சக்தி வழமைபோல் நடத்தும் பிரமாண்டமான பிரதான மேதின பேரணி இம்முறை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சிகள் – கட்டார் பிரதமருடன் ஈரானின் வெளியுறவு அமைச்சர் பேச்சு

  • April 26, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இஸ்லாமாபாத்திற்கு திரும்புவதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த உரையாடலில், போர் நிறுத்த முன்னேற்றங்களும் அதை வலுப்படுத்துவதில் உள்ள சவால்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றத்தை குறைத்து, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஈரான் மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் குறித்தும் அராக்சி விளக்கியுள்ளார். இந்நிலையில், […]

உலகம் செய்தி

அமைதி பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்!

  • April 26, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். ஈரான் தலைவர்களிடையே நிலவும் குழப்பமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ஈரான் தரப்பிலிருந்து முறையான அழைப்பு வரட்டும் எனத் தெரிவித்துள்ளார். தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் மோதல் மற்றும் எண்ணெய் ஏற்றுமதித் தடைகளால் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் நேரடிப் பேச்சுவார்த்தையில் […]

உலகம் செய்தி

ஈரான் போருக்கும், துப்பாக்கிசூட்டு சம்பவத்துக்கும் தொடர்பா?

  • April 26, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போருக்கும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைக் கண்டறியும் பணியில் புலனாய்வாரள்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தபோதிலும், தற்போதைய தகவல்களின்படி இது போர்ச் சூழலோடு இணைக்கப்படவில்லை என்று ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள் எதற்கும் அஞ்சாமல் ஈரான் விவகாரத்தில் தனது வெற்றியை நோக்கி தொடர்ந்து செயல்படப்போவதாகவும் ட்ரம்ப் உறுதிபட […]

உலகம் செய்தி

சந்தேக நபரின் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ட்ரம்ப்!

  • April 26, 2026
  • 0 Comments

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் புகைப்படம் என்பவற்றை தனது சமூகவலைத்தள பக்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சங்க விழாவின்போதே இப்பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. “உண்மை நிலவரத்தை மக்கள் அறிய வேண்டும்” என்ற நோக்கத்தில் இந்த ஆதாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளேன்.” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சந்தேக நபர் பொலிஸ் கண்காணிப்பின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

விளையாட்டு

37 பந்துகளில் சதமடித்த இளம் வீரர்: பறிபோனது வெற்றி!

  • April 26, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார். குறித்த போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான தொடக்கத்தைத் தந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை விளாசிய அவர், வெறும் 36 பந்துகளில் சதம் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். மொத்தம் 37 பந்துகளைச் சந்தித்த […]

உலகம் செய்தி

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. தனது பாகிஸ்தான் பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தி இருந்தார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்குரிய மத்தியஸ்த முயற்சியை பாகிஸ்தான் முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் […]

error: Content is protected !!