செய்தி

நாட்டு மக்களிடம் ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian அந்நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு அழுத்தங்களால் நாட்டின் கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானை எல்லா வழிகளிலும் முடக்கி அதிருப்தியை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டே எதிரி நாடுகள் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்கா மட்டும் அல்ல மேலும் பல நாடுகள் ஈரான்மீது பொருளாதாரத் தடைகளை […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: நால்வர் பலி!

  • April 25, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் பலியாகியுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் சென்ற ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது. தமது படை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தலைத் தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

ரம்மியமாக காட்சியளிக்கும் மருதானை ரயில் நிலையம் (படங்கள் இணைப்பு)

  • April 25, 2026
  • 0 Comments

மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது. புகையிரத பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மருதானை புகையிரத நிலையத்தின் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகள் மாத்திரம் இவ்வாறு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பிரதான கட்டிடம் திருத்தப்பட்டதுடன், 05 மற்றும் […]

இலங்கை செய்தி

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இரண்டாக உடைந்தது லொறி: இருவர் படுகாயம்!

  • April 25, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, லெமனியர் தோட்டத்தில் கனரக லொறியொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர். மொனறாகலை வெல்லவாய பகுதியில் இருந்து ஹட்டனிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு விறகு ஏற்றிவந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது. படுகாயமடைந்த சாரதியும், உதவியாளரும் லிந்துலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

உலகம் செய்தி

கடற்படை முற்றுகையை அமெரிக்கா கைவிடாவிட்டால் பதிலடி உறுதி: ஈரான் திட்டவட்டம்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்தால் அதற்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாக்க முந்தைய காலங்களை விட தற்போது தாங்கள் அதிக வலிமையுடன் இருப்பதாக அந்நாட்டு ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை பகுதியைக் கண்காணித்து வரும் ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்திவருகின்றது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது […]

செய்தி

ஈரானில் 57 ஆவது நாளாக நீடிக்கும் இணைய முடக்கம்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் தற்போது எட்டு வாரங்களைக் கடந்து நீடிக்கிறது. 57 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு புறாவால் வந்த ‘வினை’!

  • April 25, 2026
  • 0 Comments

விஜய் அரசியல் களத்துக்கு வந்தது முதலே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவருகின்றார். தேர்தல் பரப்புரைகளின்போது பல சவால்களை எதிர்கொண்டார். தற்போது தேர்தல் முடிந்த பின்பும் அவருக்கான சிக்கல் ஓயவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது புறாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வண்ணம் பூசப்பட்டு பறக்கவிடப்பட்ட விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருச்சியில் ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பீட்டா இந்தியா அமைப்பு , தவெக தலைவர் தலைவர் […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் ஹார்முஸ் நீரிணையில் துருக்கி களமிறங்கும்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் துருக்கி இணையக்கூடும். துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். மேற்படி தூய்மைப்படுத்தும் பணிகளைப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழுக்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், அதில் பங்கேற்பதில் துருக்கிக்கு எவ்விதத் தடையும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். எனினும், இந்த விவகாரத்தில் ஈடுபடும் நாடுகள் ஏதேனும் புதிய மோதல்களில் சிக்கினால், தனது நிலைப்பாட்டை துருக்கி மறுபரிசீலனை […]

செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஈழத்து மக்களாக ஒன்றிணைவோம்!

  • April 25, 2026
  • 0 Comments

“இவ்வருடத்துக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து ஈழத்து மக்களாக நினைவுகூர வேண்டும்.” இவ்வாறு தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், அறைகூவல் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ 2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவுகூரும் வகையில் […]

உலகம் செய்தி

புதிய திட்டத்தை முன்வைத்துள்ள ஈரான்: ட்ரம்ப் தகவல்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் புதியதொரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், அதன் முழுமையான விபரங்கள் இன்னும் தனக்குத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். அமெரிக்க அரசு தற்போது ஈரானின் முக்கிய அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஈரான் ஆர்வம் காட்டி வருவதாக ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!