உலகம் செய்தி

தோள் கொடுக்கும் ரஷ்யாவுக்கு ஈரான் நன்றி தெரிவிப்பு!

  • April 27, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை இன்று (27) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஈரானுக்கு ரஷ்யா வழங்கிவரும் உறுதியான தொடர் ஆதரவிற்கு Abbas Araghchi நன்றி தெரிவித்தார். சர்வதேச அரங்கில் ஈரான் தனித்து விடப்படவில்லை என்பதையும், தங்களுக்கு நம்பகமான நண்பர்கள் இருப்பதையும் ரஷ்யாவுடனான உறவு உலகிற்கு நிரூபிப்பதாகவும் கூறியுள்ளார். அதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய விஜயம் தொடர்பில் அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக கட்டுப்படுத்த ஈரான் வியூகம்!

  • April 27, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையின் முழுமையான கட்டுப்பாட்டைப் ஈரான் ராணுவம் பொறுப்பேற்கும் வகையில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைய மேற்படி நீரிணை வழியாகச் செல்லும் பகைமை நாடுகளின் கப்பல்களைத் தடுக்கவும் அதன் நிர்வாகத்தை முறைப்படுத்தவும் ஈரான் திட்டமிட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவரான எப்ராஹிம் அசிசி, Ebrahim Azizi ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே ஈரானியப் படைகளின் கண்காணிப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கடல்வழிப் போக்குவரத்து மூலம் ஈட்டப்படும் லாபங்கள் அனைத்தும் ஈரானிய ரியால் மதிப்பிலேயே பெறப்பட வேண்டும் என […]

உலகம் செய்தி

அமெரிக்க படைகள் தயார் நிலையில்!

  • April 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்கப் படைகள் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் CENTCOM அறிவித்துள்ளது. போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தின் பாதுகாப்பில் தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையில் மேற்படி அறிவிப்பு போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இலங்கை செய்தி

நீலகாமம் சம்பவம்: பிரதி அமைச்சர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

  • April 27, 2026
  • 0 Comments

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் பெருந்தோட்ட பகுதிகளில் அடியாட்களை வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும், நீலகாமத்துக்கு சென்றவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை முன்வைக்குமாறும் பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளரிடம் இதற்குரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பிலும், வீடமைப்பு சம்பவம் குறித்தும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று […]

உலகம் செய்தி

லெபனானில் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புமைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

  • April 27, 2026
  • 0 Comments

கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும், நாட்டின் தெற்குப் பகுதி முழுவதிலும் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்பு தளங்கள் எனக் கூறப்படும் இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள திப்னின் (Tibnin) மற்றும் யேட்டர் (Yater) நகரங்களையும் இலக்குவைத்து இரண்டு தனித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை என அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் […]

இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால தங்குமிட வசதி!

  • April 27, 2026
  • 0 Comments

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளையில் இடைக்கால தங்குமிடங்களை அமைக்கும் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல் , அவற்றைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்தல் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தபட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், இடம்பெயர்ந்த சுமார் 1,000 பேரை பாதுகாப்பான மற்றும் […]

உலகம் செய்தி

ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய பயணம் குறித்து அமெரிக்கா கழுகுப்பார்வை!

  • April 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிக்கும் நோக்கில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தற்போது ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பயணத்துக்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி புடின் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். அதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய பயணம் தொடர்பில் […]

உலகம் செய்தி

அமெரிக்க, பிரிட்டன் உறவை சீர்செய்யுமா மன்னரின் ராஜதந்திர பயணம்?

  • April 27, 2026
  • 0 Comments

பிரிட்டன் மன்னர் சார்லஸின் King Charles அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் Buckingham அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்த மன்னர், தனது பயணத்தில் சிறிய மாற்றங்களுடன் பங்கேற்க முடிவெடுத்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தின் போது மன்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். மேலும் சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். ஈரான் போர், ட்ரம்பின் வரி விதிப்பு உள்ளிட்ட விடயங்களால் பிரிட்டனும், அமெரிக்காவுக்கும் இடையிலான […]

உலகம் செய்தி

லெபனான் விவகாரத்தில் ட்ரம்பின் உத்தரவுக்கு அடங்காத நெதன்யாகு!

  • April 27, 2026
  • 0 Comments

லெபனானுடன் போர்நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், அதனை பொருட்படுத்தாது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போர் நிறுத்த விதிமுறையை இஸ்ரேல் பிரதமர் மீறுகின்றார் என லெபனான் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் நெதன்யாகு தன்னிச்சையாகச் செயல்படுவதாக அரசியல் ஆய்வாளர் Emma Shortis சுட்டிக்காட்டியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தங்கள் காகித அளவில் மட்டுமே இருப்பதாகவும், களத்தில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சர்வதேச […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: 3ஆம் கட்ட அகழ்வுப் பணி முன்னெடுப்பு!

  • April 27, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று திங்கள்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார […]

error: Content is protected !!