அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை வென்றெடுக்க ‘கூட்டு அரசியல் சமர்’ முன்னெடுப்பு!

  • May 27, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன. கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே எதிரணி தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த வலியுறுத்தலை விடுத்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்கள் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழுக்கு முதலிடம்: மீனவர்கள் விடுவிப்பு! பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

  • May 27, 2026
  • 0 Comments

“தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் டெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக […]

அரசியல் இலங்கை செய்தி

முப்படைகளை பலப்படுத்தவும்: பொன்சேகா அவசர அறைகூவல்!

  • May 27, 2026
  • 0 Comments

“பாதுகாப்பு விடயத்தில் தளர்வுகளை மேற்கொள்ளக்கூடாது. இராணுவம் வலுப்படுத்த வேண்டுமேதவிர, படை குறைப்பு செய்வது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “எமது நாடு மூன்று தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியை சந்தித்த நாடாகும். அதேபோல வெளியக அழுத்தங்களும் வரக்கூடும். எனவே, பாதுகாப்பு விடயத்தில் தளர்வுகளை மேற்கொள்ளக்கூடாது. முப்படைகள் பலமாக இருக்க […]

உலகம் செய்தி

லாவோஸில் குகைக்குள் சிக்கிய ஏழு பேரில் ஐவர் உயிருடன் மீட்பு!

  • May 27, 2026
  • 0 Comments

லாவோஸில் (Laos) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து குகையொன்றுக்குள் கடந்த ஒரு வாரமாகச் சிக்கியிருந்த 7 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். லாவோஸின் மத்திய பகுதியில் Xaisomboun மாகாணத்தில் உள்ள குகை ஒன்றிற்குள், கடந்த மே 20 ஆம் திகதி 7 பேர் சென்றுள்ளனர். அப்போது பெய்த கனமழையால் குகையின் நுழைவாயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு அவர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர் கால்பந்து […]

உலகம் செய்தி

எதிரிகளின் கலப்பு போர்முறை குறித்து ஈரான் உளவுத்துறை எச்சரிக்கை!

  • May 27, 2026
  • 0 Comments

நேரடி ராணுவ மோதல்களில் தோல்வியடைந்த எதிரிகள் தற்போது கலப்புப் போர் (hybrid warfare) முறைகளைக் கையாள்கின்றனர் என்று ஈரான் உளவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரத் தடைகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் தவறான ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் சிந்தனையை மாற்ற எதிரணிகள் முயற்சிக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ” சமூகத் தூண்டுதல்கள் மற்றும் உளவியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் நாட்டை நிலைநடுங்கச் செய்ய எதிரிகள் திட்டமிடுகின்றனர். பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது உளவு வேலைகளில் ஈடுபடும் எவருக்கும் எதிராக […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஒன்றிணைந்தது அதிமுக! சட்டமன்றத் தலைவரானார் பழனிசாமி!!

  • May 27, 2026
  • 0 Comments

அதிமுகவில் உள்ளக மோதல் உக்கிரமடைந்ததையடுத்து தனியாக செயல்பட்ட வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் மீண்டும் சங்கமித்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக்க நியமிக்குமாறுகோரி, சபாநாயகரிடம் கடிதம் கையளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். 22 எம்எல்ஏ.க்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்தனர். அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக வேலுமணியை நியமிக்க 25 எம்எல்ஏ.க்களும், பழனிசாமியை நியமிக்க 22 எம்எல்ஏ.க்களும் தனித்தனியாக […]

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்மீது தாக்குதல்: ஈரான் தூதுவருக்கு தென்கொரியா அழைப்பாணை!

  • May 27, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் HMM Namu என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய தயாரிப்பு ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சு நடத்திய தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தாக்குதலுக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் மற்றும் அதன் வெடிபொருட்களின் நிறத்தை வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வருமாறு ஈரானியத் தூதருக்கு தென்கொரிய அரசு சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சர்வதேச […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் மீண்டும் உயர்கிறது எரிசக்தி கட்டணம்!

  • May 27, 2026
  • 0 Comments

சர்வதேச அளவில் எரிவாயுவின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளதால் பிரிட்டனில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் 13 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளன. பிரிட்டனின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமான Ofgem , ஆண்டுக்கான சராசரி கட்டண வரம்பை £1,862 ஆக நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தை விட £221 அதிகமாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மக்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் பொருளாதார நெருக்கடியை […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் புதிய ராணுவத் தளபதி பலி!

  • May 27, 2026
  • 0 Comments

காசாவிலுள்ள குடியிருப்பொன்றின்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய ராணுவப் பிரிவுத் தளபதியான Mohammed Odeh கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 தாக்குதலுக்குத் திட்டமிட்டவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரை, பல மாத கால உளவுத் தகவல்களின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் இலக்கு வைத்துத் தாக்கியுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில், Odehவுடன் சேர்த்து மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர் . மேலும் பலர் காயமடைந்தனர். […]

இலங்கை செய்தி

யாழில் காணி விடுவிப்பில் இழுத்தடிப்பு?

  • May 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும், கணிசமான கோரிக்கைகளை இராணுவம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள். காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஏனைய […]